Saturday, October 11, 2025

இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட உலக சிறுவர் தின நிகழ்வுகள்..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட உலக சிறுவர் தின நிகழ்வுகள்..!
✍️ 𝐀𝐇.𝐑𝐀𝐊𝐄𝐄𝐁
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 சிறுவர்களுக்கு இடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதை நோக்காக கோண்டு 14.12.1954 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
அன்று தொடங்கி இன்று வரை உலகம் முழுவதிலும் ஒக்டோபர் 01 ஆம் திகதி சிறுவர்களுக்குரிய தினமாக கொண்டாடப்படுகிறது.
இதேவேளை அன்றைய தினம் உலக முதியோர் தினமும் கொண்டாடப்படுகிறது.
1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே இந்தத் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அந்தவகையில் இவ்வருடம்
உலக சிறுவர் தினமானது "உலகை வழிநடாத்த அன்பால் போஷியுங்கள்" எனும் கருப்பொருளின் கீழ் செப்டம்பர் 25 ம் திகதி முதல் ஒக்டோபர் 01 ம் திகதி வரை சிறுவர் வாரமாக அரசாங்கத்தினால் பிரகடணம் செய்யப்பட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவந்தன.
இத்தொடரில் இறக்காமம் அபாபீல் முன்பள்ளி பாடசாலையின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றன.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக உதவி பிரதேச செயலாளர் திரமதி ஏ.கே. றொஷின்தாஜ்
அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு அதிதிகளாக கௌரவ
பிரதேச சபை உறுப்பினர் எம். சஜா, முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். எம். இம்டாட், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி வை.பி. யஷோதா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் கிராம சேவை உத்தியோகத்தர், பொருளாதர அபிவிருத்தி உத்தியோகத்தர், அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை அபிருத்தி உத்தியோகத்தர், பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
முன்பள்ளி மாணவர்களின் வர்ண விழா, குழந்தைகளின் மகிழ்ச்சிகரமான கலை நிகழ்வுகள், பரிசளிப்புகள் என சிறுவர்களை மகிழ்வூட்டும் பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்




SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: