Ad 728x90
Ad 728x90
Ad 728x90

Sunday, October 26, 2025

அரசியல் ஆதாயங்களுக்காக நல்லவற்றை கூட விமர்சிக்க கூடாது : ஜனாதிபதியின் போதையை ஒழிக்கும்  வேலைத்திட்டங்கள் பாராட்டும் விதமாக இருக்கிறது - எச்.எம்.எம். ஹரீஸ்..!

அரசியல் ஆதாயங்களுக்காக நல்லவற்றை கூட விமர்சிக்க கூடாது : ஜனாதிபதியின் போதையை ஒழிக்கும் வேலைத்திட்டங்கள் பாராட்டும் விதமாக இருக்கிறது - எச்.எம்.எம். ஹரீஸ்..!

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 அரசியல் ஆதாயங்களுக்காக நல்லவற்றை கூட விமர்சிக்க கூடாது : ஜனாதிபதியின் போதையை ஒழிக்கும் வேலைத்திட்டங்கள் பாராட்டும் விதமாக இருக்கிறது - எச்.எம்.எம். ஹரீஸ்..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 இப்போதிருக்கும் அரசாங்கத்தின் முகாமில்லாத ஒருவராக நான் இருந்தாலும் பொதுமகனாக நோக்கும் போது இந்த நாட்டின் ஜனாதிபதி எமது நாட்டிலிருந்து போதையை ஒழிக்க முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் பாராட்டும் விதமாக இருக்கிறது. பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாவனைக்கு அறிமுகமாகி வந்த போதைப்பொருள் பாவனையை ஒழித்து மாணவர்கள் சிறந்த கல்வியை கற்க யுத்தக்களத்தில் நின்று போராடுவது போன்று அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என உள்ளூராட்சி மாகாண சபைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
கல்முனையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசிய அவர்,
ஜனாதிபதியின் இந்த போதையொழிப்பு நடவடிக்கையினால் எமது மாவட்டமும், எமது பிரதேசங்களும் நன்மையடைந்துள்ளது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பற்றி பெரியளவில் கவலையில் இருந்தார்கள். இன்று அவர்களின் கவலை நீங்கி நிம்மதியடையும் நிலை உருவாகியுள்ளது. பிள்ளைகள் 100 சதவீதம் கல்வியில் கவனம் செலுத்தும்போது பிழையான பாதையில் பயணிக்க மாட்டார்கள். இன்றைய நவீன உலகில் செயற்கை நுண்ணறிவில் உலகம் முன்னேறிக்கொண்டிருக்கிறது. அதனால் வீட்டிலிருந்தவாறே சம்பாதிக்கும் காலம் இப்போது உருவாகியுள்ளது.
கல்வி மற்றும் தொழில் புரட்சியினால் எதிர்காலத்தில் அதிக நன்மையடையும் வகையில் கல்வித்திட்டங்கள் மாறப்போகிறது. நாங்கள் மாற்று அரசியல் பயணத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் மக்களுக்கு நன்மைபயக்கும் விடயங்களை பாராட்டித்தான் ஆக வேண்டும். அரசியல் ரீதியாக ஜனாதிபதி முஸ்லிம் இளைஞர்களை போதையூட்டுவதாக அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி ஒருவர் அண்மையில் பேசியிருந்தார். அரசியல் ஆதாயங்களுக்காக முட்டாள்தனமான கருத்துக்களை பொதுவெளியில் விதைக்க கூடாது. இவ்வாறான கருத்துக்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
நல்லவிடயங்களை நல்லது என்றே கூறவேண்டும். அதே நேரம் சமூகம் சார் அநீதிகள் இடம்பெறும் போது அது ஜனாதிபதி என்றாலும் சரி எந்த தலைவராக இருந்தாலும் அநீதிக்கு எதிராக நாம் போராட வேண்டும். என்றார்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
காரைதீவு ராமகிருஷ்ண மிஷன்  ஆண்கள் பாடசாலைக்கு மின் விசிறி தொகுதிகள் வழங்கி வைத்த றிஸ்லி முஸ்தபா..!

காரைதீவு ராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலைக்கு மின் விசிறி தொகுதிகள் வழங்கி வைத்த றிஸ்லி முஸ்தபா..!

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 காரைதீவு ராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலைக்கு
மின் விசிறி தொகுதிகள் வழங்கி வைத்த றிஸ்லி முஸ்தபா..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 காரைதீவு ராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலையின் கேட்போர் கூடத்துக்கு முக்கிய தேவையாக இருந்த மின்விசிறி தொகுதிகள் மயோன் குழும தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான எம். றிஸ்லி முஸ்தபா அவர்களினால் (24) காலை வைக்கப்பட்டது.
கல்முனை கல்வி வலய காரைதீவு ராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலையின் அதிபர் துரையப்பா ஜோகனாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் திடீர் மரண விசாரணை அதிகாரி எ.எச்.அல் ஜவாஹிர், மயோன் சமூக சேவை அமைப்பு சார்பாக சிப்னாஸ் அஸீஸ், றிஸ்லி முஸ்தபா அவர்களின் காரைதீவு செயற்பாட்டாளர்களான ரகு நமசிவாயம், நவனீதன் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்




மீலாத் விழா சிறப்பு நிகழ்ச்சியும், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்!

மீலாத் விழா சிறப்பு நிகழ்ச்சியும், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்!


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 மீலாத் விழா சிறப்பு நிகழ்ச்சியும், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கல்முனை இஸ்லாமிய சங்கம் நடத்திய மீலாத் விழா சிறப்பு நிகழ்ச்சியும், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்
கல்முனை கமு/கமு/அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் இன்று (24) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இஸ்லாமிய சமூக சங்கத்தின் தலைவர் எம்.எஸ். சக்காப் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் உள்ளுராட்சி மாகாண சபைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வின் கெளரவ அதிதியாக கல்முனை கல்வி வலய நிர்வாக பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக சம்மாந்துறை ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய விரிவுரையாளர் எம்.ஆர். முகமது நௌஷாத், கல்முனை அமானா வங்கி கிளை முகாமையாளர் எஸ்.எச்.எம். சமீம், ஓய்வுபெற்ற அதிபர் சட்டத்தரணி எம்.சி. ஆதம்வாபா ஆகியோரும் விசேட பேச்சாளராக கல்முனை முகையதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் பேஷிஇமாம் மௌலவி எம்.ஏ.எம் ஜப்ரான் (கௌஸி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது, கல்முனை பிரதேச பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்