Ad 728x90
Ad 728x90
Ad 728x90

Thursday, January 8, 2026

சாய்ந்தமருதில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை..!

சாய்ந்தமருதில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை..!

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 சாய்ந்தமருதில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது 07 மார்க்கெட் வீதியில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர்‌கள் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்களின் பங்குபற்றதளோடு
நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை 07.01.2026 இடம்பெற்றது.
இவ் பரிசோதனையில் நுளம்பு பெருக்கத்துக்கு சாதுவான‌ இடங்கள் உடன் சீர் செய்யப்பட்டதுடன் நுளம்பு குடம்பிகள் காணப்பட்ட இடங்கள் உடன் அழிக்கப்பட்டதுடன் அதனை சீர் செய்ய சிவப்பு அறிவித்தல் மூலம் இரண்டு நாள் கால அவகாசமும் வழங்கப்பட்டது.
சீர் செய்ய தவரும் பட்சத்தில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்



கல்வியினால் மட்டுமே சமூகம் முன்னேற்றமடையும் சேவை செய்ய அரசியல் தேவையில்லை -முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர்..!

கல்வியினால் மட்டுமே சமூகம் முன்னேற்றமடையும் சேவை செய்ய அரசியல் தேவையில்லை -முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர்..!

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்வியினால் மட்டுமே சமூகம் முன்னேற்றமடையும் சேவை செய்ய அரசியல் தேவையில்லை -முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர்..!
✍️ எம்.என்.எம்.அப்ராஸ்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கல்வியினால் மட்டுமே சமூகம் முன்னேற்றமடையும் சேவை செய்ய அரசியல் தேவையில்லை
என் உயிர் வாழும் வரை சமூகத்தின் முன்னேற்றத்துக்காய் பயணிப்பேன் என முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார்.
கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு ரஹ்மத் பவுண்டேசனின் கல்வி விசேட வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலைக்கு "ஸ்மார்ட் போர்ட்" கையளித்தல் மற்றும் ஏ.ஆர். மன்சூர் தொழிநுட்ப அறை திறந்து வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிஷாத் தலைமையில் (06) நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்
மேலும் அவர் அங்கு உரையாற்று கையில்
என்னிடம் ஊர்வாதம் இனவதாம் இல்லை ஊர்வாதம் இனவதாம் பேசியவர்கள் நன்றாக இருந்ததுமில்லை என்பது உண்மையாகும்.
நக்ரபுற பாடாலைகளை விடவும் இந்த பாடசாலை பல சாதனைகளை புரிந்துள்ளது என்பதை பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம்.றிஷாத் பேசும் போது குறிப்பிட்டார் இது எல்லோருக்கும் பெருமையாக உள்ளது .
மேலும் இங்கு வசிக்கும் பெற்றோர்கள் தங்கள்
பிள்ளைகளை இந்த பாடசாலையில் கல்வி கற்றுக்கொள்ள சேர்த்துக் கொள்ள முன் வர வேண்டும்
மாணவர்கள் கல்வி கற்று எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும் இங்குள்ள பிள்ளைகள் சமூகத்தின் சொத்து கல்வியின் மூலமே நாம் முன்னேற்றம் அடைய முடியும் என்றார்.
இந்த நிகழ்வில் கல்முனை கல்வி வலய பிரதிக் கல்வி பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளருமான அஸ்மா அப்துல் மலீக் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டதுடன் பாடசாலை பிரதி அதிபர்,உதவி அதிபர்,ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பிரதேச நலன் விரும்பிகள்,பெற்றோர்கள் ரஹ்மத் பவுண்டேசனின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இதன் போது பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு,இஸ்லாமாபாத் விளையாட்டு கழகம்,இஸ்லாமாபாத் அக்கரைக் குழு ,இஸ்லாமாபாத் ஜனாஸா நலன்புரி அமைப்பினால் பிரதமஅதிதிக்கு நினைவு சின்னம் வழங்கியும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது .
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


 கல்முனை கடற்கரையோரத்தில் அமையப்பெற்றுள்ள கட்டிடம் ஒன்று கடலரிப்பினால் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் தற்போது காணப்படுகிறது..

கல்முனை கடற்கரையோரத்தில் அமையப்பெற்றுள்ள கட்டிடம் ஒன்று கடலரிப்பினால் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் தற்போது காணப்படுகிறது..


 கல்முனை கடற்கரையோரத்தில் அமையப்பெற்றுள்ள கட்டிடம் ஒன்று கடலரிப்பினால் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் தற்போது காணப்படுகிறது..

(06/01/2026) /
இரவு 10.00 PM #Kalmunai #Ampara #srilanka #SriLankaNews
கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தில் ஏ. ஆர். மன்சூர் தொழிநுட்ப அறை திறப்பும், ஸ்மார்ட் போர்ட் வழங்கும் சிறப்பு நிகழ்வும்..!

கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தில் ஏ. ஆர். மன்சூர் தொழிநுட்ப அறை திறப்பும், ஸ்மார்ட் போர்ட் வழங்கும் சிறப்பு நிகழ்வும்..!

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தில் ஏ. ஆர். மன்சூர் தொழிநுட்ப அறை திறப்பும், ஸ்மார்ட் போர்ட் வழங்கும் சிறப்பு நிகழ்வும்..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு கல்வி விசேட வேலைத்திட்டத்தின் கீழ் "ஸ்மார்ட் போர்ட்" கையளிக்கும் சிறப்புவிழா இன்று (06) பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிஷாத் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக பங்கேற்றதுடன்,கல்முனை கல்வி வலய பிரதிக் கல்வி பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளருமான அஸ்மா அப்துல் மலீக் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்ட இந்நிகழ்வில், ஏ.ஆர். மன்சூர் தொழிநுட்ப அறை திறந்து வைக்கப்பட்டதுடன், ஸ்மார்ட் போர்ட் உத்தியோகபூர்வமாக ரஹ்மத் மன்சூர் அவர்களினால் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது.
இந்த சிமாட் டீவி வழங்கும் செயற்பாட்டிற்கு ஒரு மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் டீவியை ரஹ்மத் மன்சூர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இந்நிகழ்வு, மாணவர்களின் எதிர்கால கல்விப் பயணத்திற்கு ஒரு புதிய திசையைத் தரும் ஒரு வரலாற்று நிகழ்வாகும்.
இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், ரஹ்மத் பவுண்டேசனின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இதன் போது பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு,இஸ்லாமாபாத் விளையாட்டு கழகம்,இஸ்லாமாபாத் அக்கரைக் குழு ,இஸ்லாமாபாத் ஜனாஸா நலன்புரி அமைப்பினால் பிரதமஅதிதிக்கு நினைவு சின்னம் வழங்கியும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும் .
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்