Ad 728x90
Ad 728x90
Ad 728x90

Friday, April 17, 2026

நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளரின் செயல்பாடுகள் குறித்து கடும் குற்றச்சாட்டு: உறுப்பினர்கள் வெளிநடப்பு..!

நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளரின் செயல்பாடுகள் குறித்து கடும் குற்றச்சாட்டு: உறுப்பினர்கள் வெளிநடப்பு..!

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉  நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளரின் செயல்பாடுகள் குறித்து கடும் குற்றச்சாட்டு: உறுப்பினர்கள் வெளிநடப்பு..!


✍️  நூருல் ஹுதா உமர் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇


✅👉  நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் அவர்களின் செயல்பாடுகள் தொடர்பாக கடும் எதிர்ப்பும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளன. பிரதேச சபை உறுப்பினர்களின் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஜனநாயக நடைமுறைகளை மீறுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


இவ்விடயம் தொடர்பாக இன்று நாவிதன்வெளியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித்தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஏ. நளீர், தவிசாளர் தன்னிச்சையான முறையில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில், நாவிதன்வெளி பிரதேச சபையினதும் உறுப்பினர்களினதும் அனுமதியின்றி, சம்மாந்துறை பிரதேச சபை எல்லைகளுக்குள் சேவையாற்ற மின்னிணைப்பு ஊழியர்கள் அனுப்பப்படுவது மிகக் கவலைக்கிடமானதாகும் என குறிப்பிட்டார். இவ்வாறு அனுப்பப்படும் ஊழியர்களுக்கு ஏதேனும் விபத்து அல்லது சேதம் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை யார் ஏற்கப் போகின்றனர் என்ற கேள்வியும் எழுப்பினார்.


மேலும், தவிசாளர் சட்டநெறிகளையும் நிர்வாக ஒழுங்குகளையும் மீறி செயல்பட்டு வருவதாகவும், இது பிரதேச சபையின் ஒழுங்குமுறையைக் கேள்விக்குறியாக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


நேற்று நடைபெற்ற நாவிதன்வெளி பிரதேச சபையின் 10வது கூட்டத் தொடரில், தவிசாளரின் இச்செயல்பாடுகளை கண்டித்து, ஐக்கிய மக்கள் முன்னணி சார்பிலான சுயாட்சி குழு உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினரும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாக அவர் தெரிவித்தார்.


மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் தமக்கு, தமது பிரதேசத்தில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், அதுவே நல்லாட்சிக்கான அடிப்படை என்றும் அவர் வலியுறுத்தினார். இத்துடன், “மக்களின் குரலாக தொடர்ந்தும் ஒலிப்போம்” என உறுதியளித்த அவர், மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க தொடர்ந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.


இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கையும் முன்வைத்த அவர் மக்கள் நலனை தவிசாளர் முன்னிறுத்தி செயற்பட முன்வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ  எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


Tuesday, April 14, 2026

கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் விடுக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்து செய்தி..!

கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் விடுக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்து செய்தி..!


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉  கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் விடுக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்து செய்தி..!


✍️  ஏ.எஸ்.எம்.அர்ஹம் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………..


✅👉  இன்று எமது நாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள அன்பான உறவுகளுக்கும் எனது இதயம் கனிந்த இனிய தமிழ் சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


இந்த இனிய புத்தாண்டு நாளில், எமது நாட்டில் பரஸ்பர புரிதலும் ஒற்றுமையும் வலுப்பெற்று, அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என நான் இறைவனை வேண்டுகிறேன்.


 குறிப்பாக, மக்களின் பொருளாதார சுமைகள் குறைந்து, அனைவரும் அமைதியான மற்றும் சுமூகமான வாழ்க்கையை நடத்தும் சூழல் உருவாக வேண்டும்.மேலும் ஒற்றுமை, சமாதானம் மற்றும் வளம் நிரம்பிய புதிய ஆண்டாக இது அமையட்டும். நம் அனைவரும் இணைந்து நல்லிணக்கத்துடன் முன்னேறி, ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்.


மீண்டும் அனைவருக்கும் எனது இனிய தமிழ் சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்!


என்றும் உங்கள்,

ரஹ்மத் மன்சூர்

முன்னாள் பிரதிமுதல்வர், கல்முனை மாநகர சபை,

ஸ்தாபக தலைவர், ரஹ்மத்பவுண்டேஷன்,

பொருளாளர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ  எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

Monday, April 13, 2026

ரமலான் வினா-விடை வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு மற்றும் குடும்ப ஒன்று கூடல் சிறப்பாக நடைபெற்றது..!

ரமலான் வினா-விடை வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு மற்றும் குடும்ப ஒன்று கூடல் சிறப்பாக நடைபெற்றது..!

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰


✅👉  ரமலான் வினா-விடை வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு மற்றும் குடும்ப ஒன்று கூடல் சிறப்பாக நடைபெற்றது..!


✍️  நூருல் ஹுதா உமர் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……..


✅👉  அல் மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா நிறுவனத்தின் அனுசரணையில், சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் ஐ. ஜாபீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ரமலான் வினா-விடை போட்டியின் வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும், அமைப்பின் உறுப்பினர்கள் குடும்ப ஒன்று கூடலும் இன்று ஒலுவில் அஸ்ரப் நகரில் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வு மதப்பண்புகளை வளர்த்தெடுத்தல், இளைஞர்களிடையே இஸ்லாமிய அறிவை ஊக்குவித்தல் மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்தல் ஆகிய நோக்கங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டதாக அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


நிகழ்வில் ரமலான் மாதத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட வினா-விடை போட்டியில் சிறந்து விளங்கிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பாராட்டப்பட்டு, அவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இது பங்கேற்றவர்களிடையே பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தியது.


அதேவேளை, அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை ஒன்றிணைக்கும் வகையில் குடும்ப ஒன்று கூடலும் நடைபெற்றது. இந்நிகழ்வின் மூலம் பரஸ்பர அறிமுகம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வு வலுப்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டது.


மேலும், நிகழ்வில் அல் மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளர் நூருல் ஹுதா உமர், அல் மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா ஆளுநர் சபை உறுப்பினர்களான அதிபர் ஏ.எல். சனூஸ், அதிபர் ஏ.எச். அலி அக்பர் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர். 


இங்கு உரையாற்றிய விருந்தினர்கள், இத்தகைய கல்வி மற்றும் சமூகநல நடவடிக்கைகள் சமூக முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானவை என வலியுறுத்தினர். குறிப்பாக, இளைஞர்களை நல்லொழுக்கம் மற்றும் அறிவு வழியில் வழிநடத்துவதில் இவ்வாறான நிகழ்வுகள் பெரும் பங்காற்றுகின்றன என அவர்கள் பாராட்டினர்.


இந்நிகழ்வில் அல் மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா பிரதி தலைவர் பீ. எம். நாஷீக், கிழக்கு மாகாண பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் மாவட்ட தலைவர் இளந்தளிர் இக்பால், சமூக செயற்பாட்டாளரும், கிராம நிலதாரியுமான எல். நசார் சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் உப தலைவர், செயலாளர், ஆலோசகர்கள், பொருளாளர், சமூக செயற்பாட்டாளர்கள், சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


இறுதியாக, இத்தகைய நிகழ்வுகளை எதிர்காலத்திலும் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ  எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்










Friday, April 10, 2026

கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 'சுரகிமு லங்கா' மின்சார சேமிப்பு வார நிகழ்வு..!

கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 'சுரகிமு லங்கா' மின்சார சேமிப்பு வார நிகழ்வு..!


 📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰


✅👉 கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 'சுரகிமு லங்கா' மின்சார சேமிப்பு வார நிகழ்வு..!


✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………


 ✅👉 'சுரகிமு லங்கா' (Surakimu Lanka) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்வு கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று (ஏப்ரல் 10, 2026) சிறப்பாக நடைபெற்றது.


​பாடசாலை அதிபர் திரு. ஏ.ஜீ.எம். றிசாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட காலை ஆராதனையில், 'க்ளீன் சிறீலங்கா' (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் இணைப்பாளர் திரு. எச்.எம். நிஸ்பான் அவர்கள் பிரதம வளவாளராகக் கலந்துகொண்டார்.


​இந்நிகழ்வின் சிறப்பம்சங்களாக

​மின்சாரச் சேமிப்பு விழிப்புணர்வுகள் குறித்து மின்சாரத்தை வீணாக்குவதைத் தவிர்த்து, தேசத்தின் முன்னேற்றத்திற்காக எவ்வாறு பொறுப்புடன் மின்சாரத்தைப் பயன்படுத்துவது என்பது தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. 


குறிப்பாக, மாலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையிலான உச்ச மின் பயன்பாட்டு நேரத்தில் மின் பாவனையைக் குறைத்தல், பயன்படுத்தாத மின் இணைப்புகளைத் துண்டித்தல் போன்ற அவசியமான ஆலோசனைகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.

​மாணவர்களின் பங்களிப்பு: மின்சார சேமிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மாணவர்களின் பேச்சுக்கள் மற்றும் அவர்களால் உருவாக்கப்பட்ட ஆக்கபூர்வமான சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மாணவர்களின் இந்தச் செயல் திறன்கள் அனைவரையும் கவர்ந்தன.


​இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அதிபர் ஆகியோர் கலந்துகொண்டு, மின்சாரத்தை முறையாகப் பயன்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.


​ இந்த விழிப்புணர்வு நிகழ்வு, மாணவர்களிடையே மின்சார சேமிப்பு மற்றும் வளங்களின் சிக்கனப் பயன்பாடு குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்







கல்முனையில்' சமுர்த்தி அபிமானி' வர்த்தகக் கண்காட்சியும், விற்பனைச்சந்தையும்..!

கல்முனையில்' சமுர்த்தி அபிமானி' வர்த்தகக் கண்காட்சியும், விற்பனைச்சந்தையும்..!

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰


✅👉  கல்முனையில்' சமுர்த்தி அபிமானி' வர்த்தகக் கண்காட்சியும், விற்பனைச்சந்தையும்..!


✍️  எம்.என்.எம்.அப்ராஸ் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……


✅👉  கல்முனை பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சமுர்த்தி அபிமானி' வர்த்தகக் கண்காட்சியும், விற்பனைச்சந்தையும்  நேற்று (09) கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.


கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி. டீ.எம். முஹம்மட் அன்சார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக செயலாளரும், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளருமான எஸ்.ஜெகராஜன் அவர்கள் கலந்து கொண்டதுடன் விஷேட அதிதிகளாக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீட், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ.அன்வர், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சீ.எம் பழீல் ஆகியோரும் ஏனைய அதிதிகளாக சமுர்த்தி வங்கிச்சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எம்.அம்சார்,கருத்திட்ட முகாமையாளர் எஸ்.எல் அஸீஸ்,சமுர்த்தி வங்கி முகாமையாளர்களான ஐ.எல்.எஸ்.ஹிதாயா,எஸ்.எஸ் பரீரா,எம்.ஏ.எம் பைசால்,சிறுகைத்தொழில் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.எல்.ஏ. ஜலீல் மற்றும் பிரதேச சமுர்த்தி சமுதாய அமைப்பின் தலைவர் ஏ.எச்.ஏ. நஜீம் ஆகியோரும் கலந்து கொண்டதுடன்,சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள்,

பிராஜா சக்தி பிரிவு தலைவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வினை கல்முனை பிரதேச செயலக சிறுகைத்தொழில் அபிவிருத்திப் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ  எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்






Wednesday, April 8, 2026

கல்முனை பொது சந்தை பகுதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் பரிசோதனை..!

கல்முனை பொது சந்தை பகுதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் பரிசோதனை..!

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 கல்முனை பொது சந்தை பகுதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் பரிசோதனை..!


✍️ எம்.என்.எம்.அப்ராஸ் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇


✅👉 எதிர்வரும் தமிழ்,சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஷகிலா இஸ்ஸதீன் அவர்களின் நெறிப்படுத்தலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஸஹ்ரா சாரப்தீன் வழிகாட்டலில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜே.எம். நிஜாமுதீன் தலைமையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கல்முனை பொது சந்தை பகுதியில் உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள் பொது சுகாதார பரிசோதகர்களினால் இன்று (08) பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. 


இதன்போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற பழுதடைந்த மரக்கறி வகைகள் ,உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு சுகாதார விதிமுறைகளை மீறிய விற்பனையாளர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் சுகாதார விதிமுறைகள்,உணவு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. 


பொது சுகாதார பரிசோதகர்களான எம். ஜூனைதீன், ஐ.எல்.எம் இத்ரீஸ், கே.எல். மன்சூர்,ஆர்.எம். முஹ்சீன் ஆகியோர் மேற் குறித்த பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்









பாராட்டும் கௌரவிப்பும்: நிந்தவூர் அல்-மஸ்ஹர் மகளிர் பாடசாலை வரலாற்றுச் சாதனை..!

பாராட்டும் கௌரவிப்பும்: நிந்தவூர் அல்-மஸ்ஹர் மகளிர் பாடசாலை வரலாற்றுச் சாதனை..!

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 பாராட்டும் கௌரவிப்பும்: நிந்தவூர் அல்-மஸ்ஹர் மகளிர் பாடசாலை வரலாற்றுச் சாதனை..!


✍️ நூருல் ஹுதா உமர் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……..


✅👉 நிந்தவூர் கமு/கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை, 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 51 மாணவிகள் பல்கலைக்கழக அனுமதியைப் பெறும் வாய்ப்பை அடைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.


நிந்தவூர் கல்விக் கோட்டத்தில் அதிகளவான பல்கலைக்கழக அனுமதிகளைப் பெற்ற பாடசாலையாக இப்பாடசாலை முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த சாதனையை முன்னிட்டு மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 2026 ஏப்ரல் 6 ஆம் திகதி பாடசாலை அதிபர் ஏ.சி. ஹாமிது தலைமையில் கலாநிதி அஸ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் நிந்தவூர் கோட்ட கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம். முதரிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


பெறுபேறுகளின் படி, மருத்துவத் துறைக்கு 03 மாணவிகளும், பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக பொறியியல் துறைக்கு 01 மாணவியும் தெரிவாகியுள்ளனர். மேலும் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 22 மாணவிகளும், வர்த்தகப் பிரிவில் முகாமைத்துவத்திற்கு 09 மாணவிகளும், வர்த்தகத்திற்கு 05 மாணவிகளும், கலைப் பிரிவில் சட்டத் துறைக்கு 01 மாணவியும், ஏனைய துறைகளுக்கு 10 மாணவிகளும் தெரிவாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.


நிகழ்வில் உரையாற்றிய அதிபர் ஏ.சி. ஹாமிது, பாடசாலை அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், கல்முனை கல்வி வலயத்தில் முன்னணி பாடசாலையாக திகழ்கின்றதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு உயர்தரப் பெறுபேறுகளில் 300 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.


இந்த சாதனைக்கு காரணமாக இருந்த மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வி அதிகாரிகள், நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து தொடர்புடையோருக்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திக் குழுச் செயலாளர் பொறியியலாளர் ஏ.எம். ஹைகல், முன்னாள் அதிபர் திருமதி ஹானியா சித்தீக், பாடசாலை மேம்பாட்டுக் குழு இணைப்பாளர் திருமதி எம்.வை. நஜிமுன்நிஷா, முன்னாள் சிரேஷ்ட ஆசிரியர் எஸ்.எம். ஜின்னாஹ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்











நீண்டகாலமாக பழுதடைந்த நீச்சல் தடாகம்: விரைவில் சீரமைக்கத் திட்டம்..!

நீண்டகாலமாக பழுதடைந்த நீச்சல் தடாகம்: விரைவில் சீரமைக்கத் திட்டம்..!

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 நீண்டகாலமாக பழுதடைந்த நீச்சல் தடாகம்: விரைவில் சீரமைக்கத் திட்டம்..!


✍️ நூருல் ஹுதா உமர் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………..


✅👉 சம்மாந்துறை விளையாட்டு தொகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகம் நீண்டகாலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்டு வந்த நிலையில், அதனை விரைவாக சீரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களிடையே நீண்ட நாளாக நிலவி வந்த கவலைகளை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் குழு கடந்த 06.04.2026 அன்று ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தது.


அப்போது, குறித்த விளையாட்டு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகள் தொடர்பாக உறுப்பினர்கள் கவனம் செலுத்தினர். குறிப்பாக நீச்சல் தடாகத்தின் சேதமடைந்த நிலைமை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.


இளம் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கும், பிரதேச விளையாட்டு மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த இத்தடாகத்தை உடனடியாக சீரமைப்பது அவசியம் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.


இதனையடுத்து, பிரதேச சபை தவிசாளரின் நேரடி கண்காணிப்பின் கீழ் நீச்சல் தடாகத்தை விரைவாக சீரமைக்கும் பணிகளை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர், சம்மாந்துறை பகுதியில் நீச்சல் விளையாட்டை மேலும் ஊக்குவிக்கும் வாய்ப்பு உருவாகும் என்றும், இளைஞர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்த சிறந்த சூழல் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த கள விஜயத்தில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் அப்னான், முஹம்மட் ஆசிக், முஹம்மட் ஹாலீத், முஹம்மது ரிஸ்விகான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்