Friday, October 17, 2025

உலக உளநல வாரத்தினை முன்னிட்டு சிறப்பாக இடம்பெற்ற அம்பாரை மாவட்ட நடமாடும் உளநல சிகிச்சை முகாம்..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 உலக உளநல வாரத்தினை முன்னிட்டு சிறப்பாக இடம்பெற்ற அம்பாரை மாவட்ட நடமாடும் உளநல சிகிச்சை முகாம்..!
✍️ ஏ.எச்.றகீப்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 உலக உளநல தினம் (World Mental Health Day) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, உடல் உள ஆரோக்கியம், விழிப்புணர்வு மற்றும் உள, சமூக நேர் மனப்பான்மை போன்றவற்றை வலியுறுத்தும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின், இலங்கை பெண்கள் பணியகமானது
"அனர்த்த அவசர கால நிலைமையின் போது உளநலத்திற்கான அணுகல்" எனும் தொனிப்பொருளின் கீழ்
இவ்வவருட உலக உளநல தின நிகழ்வுகள் நடைபெற்று வருவதுடன், அதனை சிறப்பிக்கும் வகையில் ஒக்டோபர் 10 ம் திகதி முதல் உலக உளநல வராமாக பிரகடணம் செய்து உளநல ஆரோக்கியம் தொடர்பில் மாணவர்கள், அரச ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், உயர்கல்வி நிறுவனங்கள், சிறைச்சாலைகள் என பல்வேறு தரப்பினருக்குமான வேலைத்திட்டங்களை நடாத்தி வருகின்றது.
இத்தொடரில், உலக உளநல வாரத்தினை முன்னிட்டு அம்பாரை மாவட்ட சிறப்பு நிகழ்வாக நடமாடும் உளநல சிகிச்சை முகாம் இன்று 2025.10.15 ஆம் திகதி சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நடமாடும் உளநல சிகிச்சை முகாமை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் எஸ். ஜெகராஜன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டதுடன் தம்சார்ந்த உள நெருக்கீடுகள், பிரச்சினைகள், குடும்ப, சமூக, பொருளாதாரம் மற்றும் வாழ்வாதர பிரச்சினைகள், குறிப்பாக சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் உளவள ஆலோசனை மற்றும் ஆற்றுப்படுத்தல் சேவைகளையும் உடனடி மற்றும் நீண்டகால தீர்வுகள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களை பெற்றுக்கொண்டனர்.
இவ் உளநல சிகிச்சை முகாமில் பெண்கள் பணியகத்தின் அம்பாரை மாவட்டத்தில் உள்ள அனைத்து உளவளத்துணை உத்தியோகத்தர்களும் பங்கேற்றதுடன் சேவைநாடிகளுக்கு தேவையான உளச் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கி வைத்தனர்.
மேலும் மேற்படி நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், கணக்காளர் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்












SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: