Friday, September 12, 2025

கல்முனையில் 1500வது மீலாதுன் நபி (ஸல்) பெருவிழா முன்னிட்டு – கந்தூரிற்கு அரிசி வழங்கி வைக்கும் நிகழ்வு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 கல்முனையில் 1500வது மீலாதுன் நபி (ஸல்) பெருவிழா முன்னிட்டு – கந்தூரிற்கு அரிசி வழங்கி வைக்கும் நிகழ்வு..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 மனித நேயச் சேவையில் முன்னோடி பங்களிப்புகளை வழங்கி வரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் அணுசரணையில், 1500வது மீலாதுன் நபி (ஸல்) பெருவிழா முன்னிட்டு கந்தூரிற்கான அரிசி வழங்கும் சிறப்புவிழா இன்று மரியாதையுடனும் மகிழ்ச்சியுடனும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், ரஹ்மத் மன்சூர் அவர்களின் அன்புத் தாயார் சுஹாரா மேடம் அவர்கள் தனது பொற்கரங்களால் அரிசி வழங்கி வைத்து, விழாவை இன்னும் சிறப்புமிக்கதாக்கினார்.
இவ்விழாவை உலமாக்கள், ஊர்முக்கியஸ்தர்கள், ரஹ்மத் பவுண்டேசனின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் தங்களது பங்கேற்பால் அலங்கரித்தனர்.
மீலாதுன் நபி (ஸல்) பெருவிழாவின் ஆன்மீகச் செய்தியுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்வு, சமூக ஒற்றுமையையும் சேவைச் சிந்தனையையும் வெளிப்படுத்திய நிகழ்வாக அனைவராலும் பாராட்டப்பட்டது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்







SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: