Friday, August 22, 2025

மருதமுனை அக்பர் பாடசாலை மற்றும் அக்பர் ஜும்மா பள்ளிவாசல் அபிவிருத்தி மற்றும் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக ரஹ்மத் மன்சூர் கள ஆய்வு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 மருதமுனை அக்பர் பாடசாலை மற்றும் அக்பர் ஜும்மா பள்ளிவாசல் அபிவிருத்தி மற்றும் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக ரஹ்மத் மன்சூர் கள ஆய்வு..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கல்முனை பிரதேசத்தில் கல்வி, சமூகம் மற்றும் மதத் துறைகளின் முன்னேற்றத்தை வலுப்படுத்தும் நோக்கில், மருதமுனை அக்பர் பாடசாலை மற்றும் அப்பகுதி அக்பர் ஜும்மா பள்ளிவாசலின் நிலைமைகள் குறித்து சிறப்பு களஆய்வு ஒன்றை மேற்கொள்ள மருதமுனை இந்தியன் செலக்சன் நிருவனத்தின் பணிப்பாளர் மெளலவி சாஜீத் அவர்களின் வேண்டுகோளுக்கினங்கே கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதிமுதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் இக்கள விஜயத்தினை மேற்கொண்டார்.
இக்கலந்துரையாடலில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்று, மாணவர்களின் கல்வித் தரம் உயர்த்தல், தேவையான கட்டிட வசதிகள், வகுப்பறைகள் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள், பள்ளிவாசலின் நீண்டகால குறைபாடுகள், சமூக நலத் திட்டங்கள்
போன்ற விடயங்கள் குறித்து விரிவாகப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ரஹ்மத் மன்சூர் அவர்கள்,
“கல்வி, சமூகம், மதம் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து முன்னேறினால்தான் ஒரு சமூகத்தின் வளர்ச்சி உறுதி பெறும். குறைபாடுகளை நீக்க அரசும் தனியார் துறையும் சமூகமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலின் அடிப்படையில் பாடசாலை மேம்பாட்டு நடவடிக்கைகள், மாணவர்களுக்கான கல்வி உதவித் திட்டங்கள், பள்ளிவாசல் முன்னேற்ற முயற்சிகள், சமூக நலத்திட்டங்கள்
விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வு, மருதமுனை பிரதேசத்தில் கல்வி மற்றும் மத சேவைகளின் முன்னேற்றத்திற்கு புதிய பாதையைத் திறக்கும் ஒன்றாக அமைந்துள்ளது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்











SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: