Friday, August 22, 2025

அரபுக் கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்களுக்கான வான்மை விருத்திக் கருத்தரங்கு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 அரபுக் கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்களுக்கான வான்மை விருத்திக் கருத்தரங்கு..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 அம்பாரை மாவட்ட அரபுக் கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் இஸ்லாம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வான்மை விருத்திக் கருத்தரங்கு முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சிச் செயல் முன்னணி மற்றும் "டயகோனியா" அமைப்புக்களின் அனுசரணையில் கல்முனை கமு /கமு/இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய ஸ்மார்ட் வகுப்பறையில் 17.08.2025 (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்றது.
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சிச் செயல் முன்னணியின் திட்ட இணைப்பாளர் ஏ.ஜீ.எம். றிசாத் அவர்களின் ஏற்பாட்டிலும், தலைமையிலும் நடைபெற்ற இந்த வான்மை விருத்திக் கருத்தரங்கில் அம்பாரை மாவட்டதில் உள்ள கணிசமான அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் இஸ்லாம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இந்த வான்மை விருத்திக் கருத்தரங்கின் வளவாளராக பாத்திமா உயர்கல்வி நிறுவன சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்-ஷெய்க் கலாநிதி றஊப் செயின் கலந்து கொண்டு விரிவுரை நிகழ்த்தினார். தனது விரிவுரையில் குழந்தை வளர்ப்பு, மாணவர்களின் உளவியல், கல்வி மேம்பாடு, வகுப்பறை உளவியல் உட்பட பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்தார்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்








SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: