Friday, August 22, 2025

கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் கல்முனை தாருல் அர்கம் மத்ரஸா புனரமைக்கப்பட்ட வகுப்பறை கட்டிடம் மாணவர்களின் பாவனைக்கு வழங்கி வைப்பு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் கல்முனை தாருல் அர்கம் மத்ரஸா புனரமைக்கப்பட்ட வகுப்பறை கட்டிடம் மாணவர்களின் பாவனைக்கு வழங்கி வைப்பு..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கல்முனை தாருல் அர்கம் மத்ரஸாவின் வகுப்பறை, கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் YWMA அமைப்பின் அனுசரணையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மூலம் குறுகிய காலத்திற்குள் முழுமையாக புனரமைக்கப்பட்டு, மாணவர்களின் கல்வி பயன்பாட்டிற்காக (13) உத்தியோகபூர்வமாக திறந்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் தனது பொற்கரங்களால் வகுப்பறையை பாடசாலை நிர்வாகத்தினரிடம் கையளித்தார்.
நிகழ்வின் போது, பாடசாலை நிர்வாகம் ரஹ்மத் மன்சூர் அவர்களுக்கு சிறப்பான நன்றியை தெரிவித்தது. மேலும், மத்ரஸா,ஆசிரியர்கள் நிர்வாகத்தினர், உலமாக்கள், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ரஹ்மத் பவுண்டேஷன் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த புனரமைப்பு முயற்சி, மாணவர்கள் மேம்பட்ட கல்வி சூழலில் கற்பதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்








SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: