Wednesday, March 5, 2025

வலுசக்தி அமைச்சு நாட்டு மக்களுடைய நிலைமைகளை உணர்ந்து செயற்பட வேண்டும் - பாராளுமன்றத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 வலுசக்தி அமைச்சு நாட்டு மக்களுடைய நிலைமைகளை உணர்ந்து செயற்பட வேண்டும் - பாராளுமன்றத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு..!
✍️ எஸ். சினீஸ் கான்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 மின்சக்தி அமைச்சு எமது நாட்டின் முதுகெலும்பு என்பதுடன் முக்கியமான திணைக்களங்களை கொண்ட அமைச்சாகும். இந்த அமைச்சின் பணிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்று நாங்கள் பிராத்திக்கிறோம். அதேபோல் நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டு, நாட்டினுடைய பொருளாதார நிலையினை கருத்திற்கொண்டு இந்த அமைச்சு செயற்பட வேண்டிய தேவையிருக்கிறது. ஏனைய அமைச்சுக்களை போன்று வெறுமென வியாபார நிறுவனமாக செயற்படாமல் இந்த நாட்டு மக்களுடைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு அமைச்சு தனது பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (3) நடைபெற்ற 2025 வரவு - செலவு திட்டத்தின் வலுச்சக்தி அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான. குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த நாட்களாக ஒரு பெரிய எரிபொருள் பிரச்சினை நாட்டில் உருவாகியது. பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கிவந்த மூன்று வீத தரகுப்பணத்தை உடனடியாக நிறுத்திக்கொண்டதே இப்பிரச்சினைக்கு காரணமாகும். பெற்றோலிய கூட்டுத்தாபனம் மூன்று வீத தரகுப்பணத்தை விநியோகஸ்தர்களுக்கு நீண்டகாலமாக கொடுத்துவந்தது, அதிலேதான் அவர்களது மொத்த செலவீனங்களும் அடங்குகிறது என்பது விநியோகஸ்தர்கள் மூலம் அறியக்கிடைக்கிறது. இந்த 3 வீத தரகுப்பணத்தை சிபெட்கோ நிறுவனம் மாத்திரமல்லாது அமெரிக்கா, அவுஸ்ரேலியா நிறுவனங்களும் வழங்குகின்றன . எனவே இவ்வாறான நிலையில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீடீரென இவ்வாறானதெரு முடிவு எடுத்தமை தவறான தீர்மானமாகும். அவர்களுடன் கலந்துரையாடி இதுதொடர்பில் ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதேபோல், வணக்கஸ்தலங்களுக்கு கடந்தகாலங்களில் சூரிய கலம் மூலம் மின்சக்தியை உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பள்ளிவாசல் மற்றும் தேவாலயங்களுக்கு வலுசக்தி அமைச்சு மூலமாக இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. தற்போதைய சூழ்நிலைகளில் மதஸ்தலங்கள் நிதி நிலமைகளை மேற்கொள்ள பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின் சூழ்நிலை காணப்படுகிறது. இதனை கருத்திற்கொண்டு மதஸ்தலங்களுக்கு சூரிய மின்கலம் ஊடாக மின் சக்தியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சூரிய கலம் மூலம் மின்சக்தியை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் எனவும் அவரது உரையில் கோட்டுக்கொண்டார்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: