Thursday, January 8, 2026

கல்வியினால் மட்டுமே சமூகம் முன்னேற்றமடையும் சேவை செய்ய அரசியல் தேவையில்லை -முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர்..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்வியினால் மட்டுமே சமூகம் முன்னேற்றமடையும் சேவை செய்ய அரசியல் தேவையில்லை -முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர்..!
✍️ எம்.என்.எம்.அப்ராஸ்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கல்வியினால் மட்டுமே சமூகம் முன்னேற்றமடையும் சேவை செய்ய அரசியல் தேவையில்லை
என் உயிர் வாழும் வரை சமூகத்தின் முன்னேற்றத்துக்காய் பயணிப்பேன் என முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார்.
கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு ரஹ்மத் பவுண்டேசனின் கல்வி விசேட வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலைக்கு "ஸ்மார்ட் போர்ட்" கையளித்தல் மற்றும் ஏ.ஆர். மன்சூர் தொழிநுட்ப அறை திறந்து வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிஷாத் தலைமையில் (06) நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்
மேலும் அவர் அங்கு உரையாற்று கையில்
என்னிடம் ஊர்வாதம் இனவதாம் இல்லை ஊர்வாதம் இனவதாம் பேசியவர்கள் நன்றாக இருந்ததுமில்லை என்பது உண்மையாகும்.
நக்ரபுற பாடாலைகளை விடவும் இந்த பாடசாலை பல சாதனைகளை புரிந்துள்ளது என்பதை பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம்.றிஷாத் பேசும் போது குறிப்பிட்டார் இது எல்லோருக்கும் பெருமையாக உள்ளது .
மேலும் இங்கு வசிக்கும் பெற்றோர்கள் தங்கள்
பிள்ளைகளை இந்த பாடசாலையில் கல்வி கற்றுக்கொள்ள சேர்த்துக் கொள்ள முன் வர வேண்டும்
மாணவர்கள் கல்வி கற்று எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும் இங்குள்ள பிள்ளைகள் சமூகத்தின் சொத்து கல்வியின் மூலமே நாம் முன்னேற்றம் அடைய முடியும் என்றார்.
இந்த நிகழ்வில் கல்முனை கல்வி வலய பிரதிக் கல்வி பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளருமான அஸ்மா அப்துல் மலீக் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டதுடன் பாடசாலை பிரதி அதிபர்,உதவி அதிபர்,ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பிரதேச நலன் விரும்பிகள்,பெற்றோர்கள் ரஹ்மத் பவுண்டேசனின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இதன் போது பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு,இஸ்லாமாபாத் விளையாட்டு கழகம்,இஸ்லாமாபாத் அக்கரைக் குழு ,இஸ்லாமாபாத் ஜனாஸா நலன்புரி அமைப்பினால் பிரதமஅதிதிக்கு நினைவு சின்னம் வழங்கியும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது .
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: