𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இதன்போது, குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக மேலதிகமாக தேவையான விடயங்களை தாமதமின்றி ஆவணப்படுத்தி சமர்ப்பிக்குமாறு, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளரிடம் கோரிக்கை விடுத்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் முன்வைக்கப்பட்ட இவ்வேலைத்திட்டம், நீண்டகாலமாக பிரதேச அபிவிருத்திக் குழுவின் அனுமதிக்காக காத்திருந்த நிலையில், நேற்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
குறித்த பிரதான பஸ் தரிப்பு நிலைய வேலைத்திட்டம், உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-- ஊடகப்பிரிவு




0 comments: