Friday, February 6, 2026

78வது சுதந்திர தினம் புதிய நம்பிக்கை மற்றும் புதிய சிந்தனையுடன் ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கான தொடக்கமாக அமையட்டும்..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 🇱🇰 78வது சுதந்திர தினம் புதிய நம்பிக்கை மற்றும் புதிய சிந்தனையுடன் ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கான தொடக்கமாக அமையட்டும்..!
✍️ எஸ். சினீஸ் கான்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 எமது தாய் நாட்டின் 78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா “இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” (Rebuilding Sri Lanka) எனும் கருப்பொருளின் கீழ் கொண்டாடப்படுவது, எமது நாட்டின் எதிர்காலத்திற்கான முக்கிய அழைப்பாகும். நாட்டை முன்னேற்றவும், பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொள்ளவும், கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் நின்று அனைத்து மக்களும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டிய காலமாக இது காணப்படுகிறது.
எமது நாடானது பல இனங்கள், பல மதங்கள், பல பண்பாடுகள் இணைந்து உருவான அழகான தேசம். அந்த பல்வகைத் தன்மையே எமது பலமாகும். அந்த பலத்தை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து மக்களும் அச்சமின்றி, நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழக்கூடிய ஒரு நாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்படுவதும், அந்த உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதும் உண்மையான சுதந்திரத்தின் அடையாளமாகும். நீதியும், சமத்துவமும், நல்லிணக்கமும் நிலவும் ஒரு இலங்கையை உருவாக்குவதற்கு அனைவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இந்த சுதந்திர தினம், புதிய நம்பிக்கையுடன், புதிய சிந்தனையுடன், ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கான தொடக்கமாக அமையட்டும் என பிரார்த்திக்கிறேன்.
அனைவருக்கும் இனிய 78வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்.
பாராளுமன்ற உறுப்பினர்,
பிரதித்தலைவர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: