𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


விலை உயர்வுகள், வேலைவாய்ப்பின்மை, நாணய மதிப்பிழப்பு போன்ற பிரச்சினைகள் மக்களிடையே பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தின. இவற்றினை சமாளிக்கும் பொறுப்பான நடவடிக்கைகளை ஜனாதிபதி தாராளமாக முன்னெடுத்தார். மிக மோசமான சூழ்நிலைகளிலும் அவர் மக்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து, நிலையான பொருளாதாரத் திட்டங்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள், மற்றும் அவசர உதவி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
அன்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்திலும் ஜனாதிபதியின் செயல்திறன் வெளிப்படுத்தப்பட்டது. சமீபத்தில் தித்வா புயல் நாட்டை மிக மோசமாக தாக்கியபோதும், அவருடைய நேரடி கண்காணிப்பில் பேரழிவுகளை எதிர்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகள் வழங்கப்பட்டன. அரசு அதிகாரிகள், ராணுவம் மற்றும் சமூக அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து, வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீர், உணவு மற்றும் மருத்துவ உதவிகள் விரைவாக சென்றடைந்தன.
ஜனாதிபதியின் இந்த அர்ப்பணிப்பு, ஒரு தலைவராக மக்களுக்கு நம்பிக்கையும் உறுதியையும் வழங்கின. மக்கள் தற்போது அரசியல்வாதிகள் மற்றும் கட்சிக் கோட்பாடுகளுக்குள் பிரிபடாமல் ஜனாதிபதியின் செயல் திறன் மற்றும் நேர்மையான முயற்சிகளை நேரடியாக பாராட்டி, நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவுகின்றமை, ஜனாதிபதி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது எனலாம்.
அதேபோல், நாட்டை கட்டியெழுப்பும் முயற்சியில் ஒற்றுமைதான் மிக முக்கியமாக உள்ளது. கட்சி, இன, மத வேறுபாடுகளுக்கப்பால் அனைவரும் ஜனாதிபதிக்கு ஆதரவாக இணைந்து செயல்பட வேண்டும். அரசு, மக்களின் ஒற்றுமை தான் நாட்டை மோசமான சவால்களிலிருந்து மீட்கும் முக்கிய கருவியாக காணப்படுகிறது.
இலங்கையின் எதிர்காலம் இன்னும் வளமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதற்கு, அனைத்து பிரதேசங்களிலும் ஒருமித்த முயற்சிகள் மிக அவசியமாக உள்ளதுடன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அர்ப்பணிப்பு மற்றும் பாராட்டத்தக்க சேவைகள், நாட்டின் மக்களை மாற்றம் மற்றும் முன்னேற்றம் நோக்கி ஊக்குவிக்கின்றன. மக்களின் நம்பிக்கை, அரசின் திட்டங்கள் மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவை ஒன்றிணைந்தால், இலங்கை விரைவில் மீண்டும் வளர்ச்சி பாதையில் முன்னேறும் என்பது உறுதியாகும்.
நாம் அனைவரும் அரசியல், கட்சி வேறுபாடுகளை மறந்து நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு தன்னை அர்ப்பணிக்கும் ஜனாதிபதியின் வழிகாட்டுதலுடன் ஒன்றிணைவதுதான் எமது நாட்டின் வளர்ச்சியையும், மக்களின் நலனையும் உறுதி செய்யும் மிகச் சிறந்த வழி ஆகும் என்பதில் எந்த சந்தேகமும்மில்லை.






0 comments: