𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.
இதன்போது, ஜமியா மதீனத்துன்னூர் நிறுவனத்தின் தலைவர் முப்தி முஹம்மத் அப்துல் ஹக்கீம் அஷ்ஹரி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.
ஜமியா மதீனத்துன்னூர் (Jamia Madeenathunnoor) கல்வி நிறுவனத்தின் முக்கிய அமைப்பாக, தேசிய தலைமைத்துவ நிறுவனம் நிறுவப்படவுள்ளதுடன், ஆன்மீகம், கல்வி மற்றும் சமூகத் தலைமைத்துவத்தை ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த நிறுவனம் செயல்படவுள்ளது .
2001ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஜமியா மதீனத்துன்னூர், இதுவரை பல்வேறு துறைகளில் சிறந்த தலைவர்களை உருவாக்கியுள்ளதுடன், அந்தப் பயணத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாகவே தேசிய தலைமைத்துவ நிறுவனம் கருதப்படுகிறது.
நிகழ்வில், எகிப்து நாட்டை சேர்ந்த மார்க்க அறிஞர் ஷெய்யித் அல்பத்ஹி மௌலானா, கேரளாலை சேர்ந்த கல்வியாளர்கள், சமூகத் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆன்மிக வளர்ச்சியுடனும், அறிவார்ந்த தலைமைத்துவத்துடனும் கூடிய புதிய தலைமுறையை உருவாக்க தேசிய தலைமைத்துவ நிறுவனம் முக்கிய பங்காற்றும் என்ற நம்பிக்கையும் இந்நிகழ்வில் வெளிப்படுத்தப்பட்டது.
-- ஊடகப்பிரிவு





0 comments: