Sunday, April 27, 2025

சம்மாந்துறை பிரதேச வீதிகளை ஒரு கோடி செலவில் கொங்கிறீட் இட்டு அபிவிருத்தி செய்த முன்னாள் எம்.பி ஹரீஸ் : விவசாயிகள் நன்றி தெரிவிப்பு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 சம்மாந்துறை பிரதேச வீதிகளை ஒரு கோடி செலவில் கொங்கிறீட் இட்டு அபிவிருத்தி செய்த முன்னாள் எம்.பி ஹரீஸ் : விவசாயிகள் நன்றி தெரிவிப்பு..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 சம்மாந்துறை மக்களின் நீண்டநாள் பிரச்சினையாக குண்டும், குழியுமாக பாவனைக்கு பொருத்தமற்றதாக பல வருடங்களாக இருந்த வீதிகளை செப்பனிட்டு மக்களுக்கு கையளிக்கும் நோக்கில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் டீ- 100 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 05 மில்லியன் ரூபாய் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொங்கிறீட் இடப்பட்டு செப்பனிடப்பட்ட சம்மாந்துறை மல்கம்பிட்டி மூன்றாம் குறுக்கு வீதி நிறைவுப்பணிகளை இன்று கள விஜயம் செய்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து விவசாயிகளினதும், மக்களினதும் பாவனைக்கு உகந்தவகையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் டீ- 100 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 05 மில்லியன் ரூபாய் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொங்கிறீட் இடப்பட்டு செப்பனிடப்பட்ட சம்மாந்துறை கிடாமுல்லை ஆற்று வீதி நிறைவுப்பணிகளையும் இந்த கள விஜயத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் பார்வையிட்டார்.
இதன்போது விவசாயிகளை சந்தித்து விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களுக்கு கடந்த பெருவெள்ளத்தில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்ட போதும், வடிகாலமைப்பு, நீர்ப்பாசன குளங்கள் சேதமானபோதும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் முன்னெடுத்த வேலைத்திட்டங்களுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்ததுடன் வீதி அபிவிருத்திக்கும் தமது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இந்த விஜயத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல். நூருல் ஹுதா உட்பட முன்னாள் எம்.பி ஹரீஸ் அவர்களின் இணைப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்







SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: