Sunday, April 27, 2025

சேற்றில் மூழ்கிக்கிடந்த கல்முனை "வலயக்கல்வி அலுவலக வீதி" முன்னாள் எம்.பி ஹரீஸின் நிதியொதுக்கீட்டில் கொங்கிறீட் வீதியாக மாறியது..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 சேற்றில் மூழ்கிக்கிடந்த கல்முனை "வலயக்கல்வி அலுவலக வீதி" முன்னாள் எம்.பி ஹரீஸின் நிதியொதுக்கீட்டில் கொங்கிறீட் வீதியாக மாறியது..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 இலங்கையின் கல்வித்துறையில் முன்னேற்றகரமான பல சாதனைகளை தொடர்ந்தும் நிலைநாட்டி தேசிய ரீதியில் சிறந்த கல்வி வலயங்களில் ஒன்றான கல்முனை கல்வி வலயத்தின் பணிமனை அமைந்துள்ள "வலயக்கல்வி அலுவலக வீதி" பாவனைக்கு பொருத்தமற்றதாக காணப்பட்டதை கவனத்தில் கொண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் கொங்கிறீட் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும், நூற்றுக்கணக்கான அதிபர்களும், கல்வி அதிகாரிகளும் பயன்படுத்தும் இந்த வீதி முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் டீ- 100 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 40 லட்சம் ரூபாய் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொங்கிறீட் இடப்பட்டு செப்பனிடப்பட்டது. இந்த கல்முனை "வலயக்கல்வி அலுவலக வீதி" நிறைவுப்பணிகளை கள விஜயம் செய்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் பார்வையிட்டார்.
இந்த விஜயத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல். நூருல் ஹுதா உட்பட முன்னாள் எம்.பி ஹரீஸ் அவர்களின் இணைப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதன்போது கல்முனை பிராந்திய கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் கல்முனை கல்வி வலய கல்வி எழுச்சிக்கு முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்





SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: