Sunday, December 7, 2025

போதைப் பொருளை ஒழிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் சமூக கடமையாகும் : ஜனாதிபதியின் திட்டத்தை வரவேற்கும் வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 போதைப் பொருளை ஒழிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் சமூக கடமையாகும் : ஜனாதிபதியின் திட்டத்தை வரவேற்கும் வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பு..!
✍️ நூருல் ஹுதா உமர்
✅👉 ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில் (30.10.2025) சுகததாஸ உள்ளக விளையாட்டு அரங்கில் அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ள “முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாடு” எனும் தொனிப் பொருளிலான போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம், இலங்கை சமூகத்தின் ஒழுக்கம், நலன் மற்றும் எதிர்கால தலைமுறையின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் வரலாற்று சிறப்புமிக்க முயற்சியாகும் என வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின் தலைவி றிகாஸா ஷர்பீன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“விச போதைப் பொருளை ஒழிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல; இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் சமூக கடமையாகும். இந்த முயற்சிக்காக அரச இயந்திரங்கள், முப்படைகள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் ஒருமித்து செயல்பட வேண்டும்.
குறிப்பாக பெண்கள் சமூகம் மற்றும் குடும்பங்களுக்காக இது மிகப்பெரும் நன்மையை ஏற்படுத்தும். போதைப் பொருள் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் குடும்பத் தலைவர்கள் மீண்டும் நம்பிக்கை மிக்க வாழ்க்கைக்கு திரும்புவதற்கு இது வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின் சார்பில் ஜனாதிபதியின் இவ்வுயர்ந்த முயற்சியை மனமார்ந்த பாராட்டுக்களுடன் வரவேற்கிறோம்.
இந்த முயற்சி ஒரு அரசாங்கத் திட்டமாக மட்டுமல்லாமல், முழு நாட்டின் மீட்சிக்கான மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
“போதைப் பொருள் இல்லாத இலங்கை — பாதுகாப்பான, சுகமான சமுதாயம்” என்பது எங்களின் நோக்கமாகும்.
இந்த இலக்கை அடையும் பாதையில் ஜனாதிபதிக்கும் அவரின் அணியினருக்கும் எங்கள் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கப்படும் என றிகாஸா ஷர்பீன் தனது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: