

தேசிய வாசிப்பு மாத ந
ிகழ்வு 2025..!


2025/10/29 இன்று புத்தகங்களை வாசிப்போம் உலகை வெல்வோம் எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபர் எம்.நவாஸ் சௌபி அவர்களின் தலைமையில் நூலகப் பொறுப்பாசிரியர் ஏ.எம்.யாசிர் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம் பெற்றது.
நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு வாசிப்பின் முக்கியத்துவத்தை தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை விரிவுரையாளர் அப்துல் ரசாக் அவர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதன் போது மாணவர்களால் பாடசாலை நூலகத்திற்கு நூல்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
0 comments: