Sunday, December 7, 2025

ஏறாவூர் தாமரைக்கேணியில் விபத்து, பெண் ஒருவர் பலி..!

Ad 728x90

 


📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 ஏறாவூர் தாமரைக்கேணியில் விபத்து,
பெண் ஒருவர் பலி..!
✍️ ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 ஏறாவூர் பொலிஸ் பிரிவு தாமரைக்கேணி சவுக்கடி வீதி நாட்சந்தியில் (06/12) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஏறாவூர் மீராகேணி, நேயம் கிராமத்தை சேர்ந்த தியாராசா சாமிளா (46) என்ற இரு பிள்ளைகளின் தாய் மரணமடைந்துள்ளார்,
இன்று மதியம் பகலுணவுக்காக தனது தாய் வீட்டுக்கு சென்று பிற்பகல் 04.00 மணியளவில் நேயம் கிராமம் நோக்கி சகோதரியின் மோட்டார் சைக்கிளில் அவரது 10 வயது மனுடன் பின் ஆசனத்திலிருந்து பயணிக்கும் போது,தாமரைக்கேணி நாட்சந்தியில் வைத்து சவுக்கடி கடற்கரை பக்கமாகவிருந்து வேகமாக பயணித்த பிக்கப் வாகனத்துடன் மோதுண்டதால் சம்பவ இடத்திலேயே இவர் மரணமானதோடு, மற்றைய இருவரும் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஏறாவூர் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளின் படி, சம்பவ இடத்துக்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி MSM. நஸீர், மரண விசாரணை மேற்கொண்டு உடற்கூறு பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.
நாளை உடற்கூறு பரிசோதனை முடிவுற்றதும் பிரேதம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்






SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: