டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை உறவுகளுக்கு உதவிக் கரம் நீட்ட கத்தாரில் உள்ள நமது சகோதர, சகோதரிகளுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்.
கண்ணியத்திற்குரிய கத்தார் வாழ் உறவுகளே, இலங்கையின் பல்வேறு பகுதிகளைத் தாக்கிய டித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட நம்முடைய இலங்கைச் சகோதர, சகோதரிகள், தற்போது அடிப்படைத் தேவைகளின்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளர்.
வீடுகளையும் வாழ்வாதாரத்தையும்இழந்த அவர்களுக்கு நமது உதவி அவசரத் தேவையாக உள்ளது.
அவர்களின் துயரைக் களைய, FSMA - Q அமைப்பு கத்தார் மண்ணில் ஒரு மனிதாபிமான உதவித் திட்டமாக கிடுகுத் திட்டம் ஏற்பாடு செய்துள்ளது என்பதைப் பணிவன்புடன் அறியத் தருகிறோம்.
இந்த உன்னதப் பணியில் உங்களது முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் மனமுவந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறம்.
அல்லாஹுவின் கருணையையும் அருளையும் வேண்டி, இந்தப் பணியில் பங்கெடுக்கும் அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.
கீழுள்ள Google Form மூலம் தங்களுடைய முற்பதிவுகளை மேற்கொள்ளுமாறு பணிவாய் வேண்டிக்கொள்கிறோம்.
பதிவுக்கான இறுதி திகதி : 12 / 12 / 2025
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


0 comments: