Friday, October 17, 2025

சிங்கள மொழியிலான காலை ஆராதனையும், வரவேற்பு நிகழ்வும்..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 சிங்கள மொழியிலான காலை ஆராதனையும், வரவேற்பு நிகழ்வும்..!
✅👉 கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலையில் வாரம் தோறும் நடைபெற்றுவரும் மும்மொழிகளினாலான காலை ஆராதனையில் இவ்வாரத்திற்கான ஆராதனை முற்று முழுதாக சிங்கள மொழியில் நடைபெற்றது.
2025.10.13 திங்கட் கிழமை பாடசாலை அதிபர் திரு ஏ.ஜீ.எம். றிசாத் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்காலை ஆராதனை சிங்கள மொழிக்குப் பொறுப்பான ஆசிரியை திருமதி. ஏ.பீ .கைஸ் அவர்களின் நெறியாள்கையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் அனைத்து நிகழ்வுகளும் சிங்கள மொழியிலேயே நடைபெற்றன.
மேலும் நிகழ்வின் போது பாடசாலை ஒழுக்காற்று குழுவினரால் வகுப்புத் தலைவர்களுக்கான சின்னங்களும், வெளிச்செல்லும் அனுமதி அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
அத்தோடு அட்டாளைச்சேனை, தாளங்குடா கல்வியியற் கல்லூரிகளில் இருந்து கட்டுறுப் பயிலுனர்களாக வருகைதந்த ஒன்பது ஆசிரிய மாணவர்களும் பாடசாலையின் அதிபர் திரு.ஏ.ஜீ.எம்.றிசாத் அவர்களினால் வரவேற்கப்பட்டு கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்







SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: