Tuesday, October 7, 2025

சர்வதேச சிறுவர் தினம் 2025..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 சர்வதேச சிறுவர் தினம் 2025..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 " உலகை வழி நடத்த அன்பால் போசியுங்கள்" எனும் இவ்வருட சிறுவர் தினத் தொனிப்பொருளுக்கமைவாக கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலையில் இன்று 2025.10.01ம் திகதி சிறுவர் தினக் கொண்டாட்டம் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் திரு .ஏ.ஜீ.எம்.றிசாத் அவர்களின் தலைமையில் இந் நிகழ்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன.
மேலும் முதலாவது கட்டமாக மாணவர்களின் ஊர்வலம் இடம்பெற்றது. இந்த ஊர்வலம் கல்முனை வலயக் கல்வி பணிமனையில் ஆரம்பித்து கல்முனையின் பிரதான வீதியின் ஊடாக சென்று மீண்டும் கல்முனை சந்தை வழி ஊடாக பாடசாலையை வந்தடைந்தது.
இதன்போது சிறுவர்களின் உரிமைகள், அவர்களது பாதுகாப்பு, கல்வி போன்ற செயற்பாடுகள் தொடர்பான பதாகைகள் மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த ஊர்வலமானது சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியதாகவும் சிறுவர்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஒரு கண்டனமாகவும் அமையப்பெற்றது.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கல்முனை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் குளிர் பானங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இச் சிறுவதினத்தின் இரண்டாம் கட்டமான விளையாட்டுப் போட்டிகள் மாணவர்களை மகிழ்வூட்டும் விதமாக பாடசாலை மைதான வளாகத்தில் நடை பெற்றது.
இந்த சிறுவர் தின விளையாட்டு போட்டிக்கு பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்வி பணிப்பாளர் யூ.எல். எம். சாஜித் அவர்களும்
கௌரவ அதிதியாக கல்முனை பொலிஸ் நிலைய சிறுவர் மகளிர் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பீ.எம்.என்.சுவர்ணகாந்தி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் மாணவர்களுக்கு ஆசிரியர் குழாத்தினார் இனிப்பு பண்டங்கள் வழங்கி மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தினர்.
அத்தோடு இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்த அனைவருக்கும் பாடசாலையின் பிரதி அதிபர் திரு.எம். ரீ.ஏ.முனாப் அவர்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்













SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: