Tuesday, September 30, 2025

இணைந்த கரங்கள் அமைப்பினால் ஆசிரியர் பற்றாக்குறையான பாடசாலைகளுக்கு தொண்டர் ஆசிரியர்களை நியமித்து வகுப்புகள் ஆரம்பிப்பு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 இணைந்த கரங்கள் அமைப்பினால் ஆசிரியர் பற்றாக்குறையான பாடசாலைகளுக்கு தொண்டர் ஆசிரியர்களை நியமித்து வகுப்புகள் ஆரம்பிப்பு..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 இணைந்த கரங்கள் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்/மமே/இழுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் சில மாதங்களாக கணித பாடத்தை மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான ஆசிரியர் இல்லாத காரணத்தினால் வலயக் கல்வி பணிமனை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஆசிரியர்களை வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று மட் /மமே/இழுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலய அதிபர் தலைமையில் நடைபெற்றது.
மட்/மமே/இழுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்கான கொடுப்பனவை
இணைந்த கரங்கள் உறவுகள் ஊடாக பயணிக்கும் அவுஸ்திரேலிய நகையக உரிமையாளரான திரு. பாக்கியராசா அவர்களால் வழங்கப்படுகின்றது. மேலும் மட்/மமே/ வெலிக்ககண்டி விபுலானந்தா வித்தியாலயம் மற்றும்மட்/மமே/ மாவலையாறு கைலான் வித்தியாலயங்களில் கல்வி கற்பிக்கும் ஆரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை இணைந்த கரங்கள் உறவுகள் ஊடாக வழங்கி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந் நிகழ்வில் இணைந்த கரங்கள் அமைப்பின் பிரதிநிதிகள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: