𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான, கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில், கட்சியின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித், கட்சியின் இளைஞர் அமைப்பாளரும் பொத்துவில் நகரபிதாவுமான M.முஷரப்,நகர சபை காத்தான்குடி நகரசபை முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர், கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.சீ. சமால்தீன், கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மற்றும் பல ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலில், கட்சியின் எதிர்கால செயல் திட்டங்கள், உறுப்பினர் வலுப்படுத்தல் நடவடிக்கைகள், மற்றும் மக்களுடன் நெருக்கமான உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகள் குறித்து விரிவான விவாதங்கள் இடம்பெற்றன.
நிகழ்வு, ஒன்றுபட்ட செயற்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தி நிறைவுற்றது.














0 comments: