Sunday, August 3, 2025

மர்ஹூம் ஏ.ஆர். மன்சூரின் மறுவாழ்வுக்கு சாய்ந்தமருது தஃவா இஸ்லாமியா கலாசாலையில் மதிய போசனத்துடன் நினைவுகூரல் மற்றும் தூஆ பிரார்த்தனை நிகழ்வு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 மர்ஹூம் ஏ.ஆர். மன்சூரின் மறுவாழ்வுக்கு சாய்ந்தமருது தஃவா இஸ்லாமியா கலாசாலையில் மதிய போசனத்துடன் நினைவுகூரல் மற்றும் தூஆ பிரார்த்தனை நிகழ்வு..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் ஏற்பாட்டில், அவரது தந்தையார் மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் மறுமை வாழ்விற்காக தூஆ பிரார்த்தனை நிகழ்வு இன்று (28) மதியம், சாய்ந்தமருது தஃவா இஸ்லாமியா கலாசாலையில் சிறப்பாக நடைபெற்றது.
மனமுருகலுடனும், இஸ்லாமிய அன்பும் நிரம்பியபடி நடைபெற்ற இந்த நிகழ்வில், மறைவுற்றோருக்காக அல்-குர்ஆன் பாராயணம் மற்றும் சிறப்பு தூஆ பிரார்த்தனை நடைபெற்றது. இதனுடன் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய போசனமும் வழங்கப்பட்டது.
இந்த நினைவுகூரல் நிகழ்வில், கனடாவிலிருந்து வருகைதந்த சகோதரர் ஜெஸ்லி ஆதம்பாபா, உலமாக்கள், கலாசாலையின் மாணவர்கள், மற்றும் ரஹ்மத் பவுண்டேசனின் உயர்மட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மர்ஹூமை துஆவுடன் நினைவுகூர்ந்தனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
















SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: