𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இந்த நிகழ்வில், ரஹ்மத் மன்சூர் அவர்கள் தனது பொற்கரங்களால் பயனாளிகளுக்கு நேரடியாக குழாய் கிணறுகளை வழங்கி வைத்தார். குழாய் கிணறுகளைப் பெற்ற பயனாளிகள் தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர். நிகழ்வில் பயனாளிகள், நலன்விரும்பிகள், பவுண்டேசன் உறுப்பினர்கள் மற்றும் ஊர் மக்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வின் இறுதியில், சுஹாரா மேடம் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை இடம்பெற்றது. இதில், அல்லாஹ்வின் அருள், பரிபூரண ஆரோக்கியம், மனநிறைவு, நீண்ட ஆயுள் மற்றும் இவ்வுலகிலும் பரலோகத்திலும் நன்மை நிறைந்த வாழ்வு கிடைக்க வேண்டுமென அனைவரும் ஒன்றுபட்டு வேண்டினர். மேலும், அவர் சமூக நலனுக்காக வழங்கும் ஆதரவும் அர்ப்பணிப்பும் தொடர அல்லாஹ் வழிகாட்டிட பிரார்த்தனை செய்யப்பட்டது.
இத்தகைய நற்பணிகள் ஊர் மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் பாராட்டினர்.








0 comments: