Friday, July 25, 2025

கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் வயதான தாய்க்காக குடிநீர் இணைப்பு வழங்கல் நிகழ்வு..!

Ad 728x90

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் வயதான தாய்க்காக குடிநீர் இணைப்பு வழங்கல் நிகழ்வு..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவையுடைய பயனாளிகளுக்கு, குறிப்பாக தினசரி வேலைப்பளுவிலும், உடல் நல சவால்களிலும் வாழும் ஒரு வயதான தாய்க்காக குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு இன்று (23) மனிதநேயத்துடன் முன்னெடுக்கப்பட்டது.
அத்தாயின் குடிசை வீட்டில் நீர் வசதியின்றி நீண்ட காலமாக துன்பப்பட்டு வந்த நிலையில், அதனை நேரில் அறிந்த சமூக அக்கறையுடையவர்கள், தேசிய நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பை பெறுவதற்காக கல்முனை ரஹ்மத் பவுண்டேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை உடனே ஏற்று,
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும்,
கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும்,ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான
ரஹ்மத் மன்சூர் அவர்கள், YWMA பேரவையின் ஏற்பாட்டில் குறுகிய காலத்துக்குள் இக்குடிநீர் இணைப்பை ஏற்படுத்தி, அந்தத் தாய்க்கு நேரில் சென்று கையளித்தார்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்




SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: