𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இவ் விஜயத்தின் போது மைதானத்தில் மேற்கொண்டு செய்ய வேண்டிய வேலைகள் சம்மந்தமாகவும் ஏனைய தேவைகள் சம்மந்தமாகவும் கலந்துரையாடியிருந்தார்.
இந்த மைதானமானது அம்பாறை மாவட்டத்தில் ஒரேயொரு மின்னெளி மைதானமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ் விஜயத்தின் போது கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.எம் முஸ்தபா,மற்றும் எம்.சமீம்,மருதம் விளையாட்டுக்கழக செயலாளர் அசன் மனாஸ்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் நெளபர் ஏ பாவா உட்பட கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கல்முனை பிரதேச செயலகம் மற்றும் மாநகர சபை ஆகியன இணைந்து இவ்வேலைத்த்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து நிறைவேற்றியது. இவ் செயற்திட்டத்தினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள உதைப்பந்தாட்ட வீரர்கள் மற்றும் மென்பந்து கிரிக்கெட் வீரர்கள் அதிகம் பயனடைவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.







0 comments: