Sunday, April 13, 2025

நாவிதன்வெளி அமீரலி மைதானத்தில் முன்னாள் எம்.பி ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் பிரமாண்ட பார்வையாளர் அரங்கு நிர்மாணிப்பு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 நாவிதன்வெளி அமீரலி மைதானத்தில் முன்னாள் எம்.பி ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் பிரமாண்ட பார்வையாளர் அரங்கு நிர்மாணிப்பு..!
✅👉 நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 பிராந்திய விளையாட்டுத் துறையை மேம்படுத்த முன்னாள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் பல்வேறு வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக திகாமடுல்ல மாவட்டம் முழுவதும் முன்னெடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக நாவிதன்வெளி மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்த அமீரலி விளையாட்டு மைதான அபிவிருத்தி பணிகளுக்காக கடந்த காலங்களில் நிறைய நிதி ஒதுக்கீடுகளை செய்திருந்தார். அதனையொட்டியதாக அப்பிரதேச மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்த ஒழுங்கான பார்ப்போர் அரங்கு இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் முகமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களினால் டீ- 100 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 மில்லியன் ரூபாய் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட பார்ப்போர் அரங்கின் நிர்மாணப்பணிகளை கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேரில் சென்று பார்வையிட்டார்.
நிர்மாணப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த பார்வையாளர் அரங்கில் மேற்கொண்டு செய்ய வேண்டிய வேலைகள் சம்மந்தமாகவும், ஏனைய தேவைகள் சம்மந்தமாகவும் இதன்போது கலந்துரையாடி இருந்தார்.
மேலும் இவ் விஜயத்தின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பாடல், ஊடக விவகார செயலாளர் நூருல் ஹுதா உமர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள் உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த அபிவிருத்தி திட்டத்தின் மூலம் விளையாட்டு வீரர்களும், பாடசாலை மாணவர்களும் நிறைவான பலனை அடைவதுடன் எதிர்காலத்தில் விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகளை பெற இது வசதியாக இருக்கும் என்றும் இந்த பார்வையாளர் அரங்கு நிர்மாண பணியானது அப்பிரதேச மக்களுக்கு மட்டுமல்ல ஏனைய பிரதேச வீரர்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்




SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: