Monday, February 24, 2025

கமு/அல்-அக்ஷா வித்தியாலயத்தின் 2025 ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டி இறுதி நாள் நிகழ்வு…!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 கமு/அல்-அக்ஷா வித்தியாலயத்தின் 2025 ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டி இறுதி நாள் நிகழ்வு…!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 அல்-அக்ஷா வித்தியாலயத்தின் 2025 ஆண்டுக்கான இல்லகளுக்கான இடையிலான விளையாட்டு போட்டி கடந்த 3 நாள்களாக நடைபெற்று இன்று இறுதிநாள் நிகழ்வு மிகவும் விமர்சையாக தலைவர் அஷ்ரஃப் மைதானத்தில் பாடசாலையின் அதிபர் ML.பாதுரூத்தின் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை வலய கல்விப் பிரதி பணிப்பாளர் MHA.ஜாபிர் அவர்கள் கலந்து கொண்டதுடன்.சிறப்பு விருந்தினராக AHM.அன்சார் ISA மற்றும் VT.தையூப் ISA, KM/Ganesha Vidyalaya அதிபர் P.கமலேநாதன், KM/Lafir Vidyalaya அதிபர் CM.நஜீப் மற்றும் KM/Islamabad Vidyalaya அதிபர் AGM.ரிசாட், KM/Sivasakthi Vidyalaya அதிபர் S.தனராஜ் ஆ‌கியோ‌ர் கல‌ந்து கொ‌ண்டன‌ர். மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், சமூக சேவை அமைப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் பிரதம அதிதி, பாடசாலை அதிபர், அதிதிகளினால் தேசிய கொடி, பாடசாலை கொடி, இல்லவிளையாட்டுற்கானா கொடி மற்றும் இல்லங்களுக்கான கொடி இல்லங்களுக்கான பொறுப்பு ஆசிரியர்களால் ஏற்றிவைக்கப்பட்டதுடன் அதனை தொடர்ந்து பிரதம அதிதி உரையாற்றி இந் நிகழ்வை ஆரம்பம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் இல்லங்களுக்கு இடையிலான அணிநடை பவனி, போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கமும் சான்றிதழ்களும் மற்றும் வெற்றி பெற்ற இல்லத்திற்கு வெற்றி கோப்பை வழங்கி வைப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன்.
மேலும் இந் நிகழ்வில் ஒரு அங்கமாக கமு/அல்-அக்ஷா வித்தியாலயத்தில் 2023(2024) ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சையில் 8A1B பெற்று சித்தியடைந்த ML.நாசீகா எனும் மாணவியை கௌரவிக்கும் விதமாக MHK Marketing Pvt நிர்வாக இயக்குனர் M.மாஜித் அவர்களால் ரூபா.15,000 பெறுமதியான காசோலை வழங்கி வைக்கப்பட்டது இதன் போது பாடசாலையின் அதிபரும் கலந்து கொண்டார்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்




















SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: