🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 ரஹ்மத் பவுண்டேசனின் மனிதநேயக் கரம் – தேவையுடைய குடும்பங்களுக்கு குழாய்க்கிணறுகள் அன்பளிப்பு..!
✍️ ஏ.எஸ்.எம். அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………
✅👉 "மனிதர்களுக்கான சிறந்த சேவை, அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதே" என்ற உயரிய சிந்தனையை நடைமுறைப்படுத்தி வரும் மனிதாபிமானி ரஹ்மத் மன்சூர் அவர்களின் மற்றுமொரு மனிதநேயச் செயற்பாடாக சாய்ந்தமருது பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பங்களுக்கு குழாய்க்கிணறுகள் அமைத்து வழங்கப்பட்டுள்ளன.
சமீப காலமாக அதிகரித்துள்ள நீர்க்கட்டணங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக குடிநீர் வசதிக்காக பல சிரமங்களை எதிர்நோக்கிய குடும்பங்களை இனங்கண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
YWMA பேரவையின் அனுசரணையில், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட இக்குழாய்க்கிணறுகள், பயனாளிகளின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளை இனங்கண்டு, எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராது தொடர்ச்சியாக மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டு வரும் ரஹ்மத் மன்சூர் அவர்களின் இச்சேவை, அப்பிரதேச மக்களின் பாராட்டையும் நன்றியையும் பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள், பயனாளிகள், சமூகப் பிரமுகர்கள் மற்றும் பிரதேச மக்கள் கலந்துகொண்டனர்.
மனிதாபிமானம், சமூகப் பொறுப்பு மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் ரஹ்மத் பவுண்டேசனின் பணிகள், சமூக மாற்றத்திற்கான முன்மாதிரியாகத் திகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்







0 comments: