🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பொதுக்கிணறு திறந்துவைப்பு..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
நிருபர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………..
✅👉 அட்டாளைச்சேனை பிரதேசத்தில்
நீர் வசதியின்றி கடுமையான சிரமத்தை எதிர்கொண்ட பல குடும்பங்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில், ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் புதிய பொதுக்கிணறொன்று அமைத்து வழங்கப்பட்டது.
இந்த செயற்திட்டம் YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பொருளாளர் மற்றும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் கௌரவ ரஹ்மத் மன்சூர் அவர்களின் வழிநடத்தலில் மிகவும் குறுகிய காலத்திலேயே திட்டமிடப்பட்டு, திறம்பட நிறைவேற்றப்பட்டது.
பொதுக்கிணறின் திறப்பு விழாவில், உலமாக்கள், பயனாளிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பவுண்டேசன் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, பவுண்டேசனின் சேவையை மனமுவந்த நன்றியுடன் பாராட்டினர்.
"பதவியின்றி மக்களின் மனங்களில் பதியும் செயற்பாடுகளே உண்மையான சேவை" என்பதற்கான நேரடி எடுத்துக்காட்டாக, இந்த நற்செயல் மக்கள் வாழ்வில் ஒரு முக்கிய நிவாரணமாக அமைந்துள்ளது.
இந்தச் சமூகநலப் பணி, சமூகத்தில் ஊக்கமூட்டும் ஒரு புதிய வழிகாட்டுதலாகவும், உதவிக்கு நாடும் பலருக்கு நம்பிக்கையூட்டும் ஓர் அழகிய உதாரணமாகவும் விளங்குகின்றது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்









0 comments: