🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்முனை நூறானியா ஜும்மா பள்ளிவாசலின் கட்டிட வேலைத்திட்டத்திற்கு ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் 2.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………..
✅👉 இறை இல்லத்தின் அபிவிருத்தியை நோக்கி அரிய சமூகச் சேவை நிகழ்வு ஒன்று கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் தலைமைக் காரியாலயத்தில் (21) நடைபெற்றது.
கல்முனை நூறானியா ஜும்மா பள்ளிவாசலின் மூன்றாம் கட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் மொத்தம் 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் கட்டமாக 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலை இன்று வழங்கி வைக்கப்பட்டது.
இக்காசோலையை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து வழங்கினார்.
இந்நிகழ்வில் கல்முனை நூறானியா ஜும்மா பள்ளிவாசலின் தலைவர், நிர்வாகத்தினர், பள்ளிவாசல் உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு இந்நற்காரியத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
இறை இல்லத்தின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய சேவைகள் சமூக ஒற்றுமையையும் இறைபக்தியையும் வலுப்படுத்தும் உயரிய பணியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்











0 comments: