𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄
அவர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது..,
ஒரு மாத காலம் நோற்கப்பட்ட நோன்பானது பசியையும் தாகத்தையும் தாங்குவது மட்டுமல்லாது மனிதனின் மனதையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்தும் உயர்ந்த ஆன்மிகப் பயிற்சியாகும். தன்னடக்கம், கருணை, சகிப்புத் தன்மை, ஏழை எளியவர்களிடம் இரக்கம் காட்டுதல் போன்ற உயர்ந்த பண்புகளை வளர்க்கும் அரிய வாய்ப்பாக ரமழான் மாதம் விளங்குகிறது.
ஈதுல் பித்ர் பெருநாள் நமக்கு மகிழ்ச்சியையும் பகிர்வையும் நினைவூட்டும் ஒரு சிறப்பு நாளாகும். இந்த நாளில் நாம் ஒருவருக்கொருவர் அன்பையும் ஒற்றுமையையும் வளர்த்துக் கொண்டு, சமாதானத்துடனும் புரிந்துணர்வுடனும் வாழ வேண்டும் என்ற செய்தியையும் இந்த புனித நாள் எடுத்துரைக்கிறது.
பல இனங்களும் பல மதங்களும் இணைந்து வாழும் எமது நாட்டில், ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை மேலும் வலுப்பெற வேண்டும் என்பது எனது விருப்பமாகும். இந்த பெருநாள், அனைத்து இலங்கை மக்களிடையே சகோதரத்துவ உணர்வையும் மனித நேயத்தையும் மேலும் உறுதிப்படுத்தட்டும்.
இஸ்லாம் என்பது அமைதி, கருணை மற்றும் மகிழ்ச்சியை வலியுறுத்தும் மார்க்கமாகும். மனிதகுலம் முழுவதும் அமைதியாகவும் நலமாகவும் வாழ வேண்டும் என்பதே அதன் உயர்ந்த போதனையாகும். ஆகையால் இந்த பெருநாள், உலகெங்கும் அமைதி நிலவவும், மனிதர்களுக்கிடையில் அன்பும் புரிந்துணர்வும் அதிகரிக்கவும் ஒரு வாய்ப்பாக அமையட்டும்.
இந்த மகிழ்ச்சியான ஈதுல் பித்ர் பெருநாளில், எல்லாம் வல்ல அல்லாஹ் இலங்கை நாடுக்கும் அதன் மக்களுக்கும் அமைதி, ஒற்றுமை, அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் அருள்வானாக என்றும், தற்போதைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் பூரண சமாதானமும் அமைதியும் நிலவச் செய்வானாக என்றும் பிரார்த்திக்கிறேன்- எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
See less


0 comments: