𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 

………
இந்நிகழ்வு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அதிமெதகு பாஹிமுல் அஸீஸ் அவர்களின் அனுசரணையுடன் ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் கல்முனை மாநகரசபை பிரதி முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு, இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை நேரடியாக வழங்கி வைத்தார்.
இந்த உபகரணங்கள் வெறும் விளையாட்டு சாதனங்கள் அல்ல; இவை இளைஞர்களின் கனவுகளை உயர்த்தும் கருவிகளாகவும், அவர்களின் ஒழுக்கம், ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்க்கும் அடித்தளமாகவும் அமைகின்றன.
விளையாட்டு என்பது உடல்நலத்தை மட்டுமல்லாது, தலைமைத்துவம், பொறுப்புணர்வு மற்றும் சமூக ஒற்றுமையை உருவாக்கும் சக்திவாய்ந்த தளமாகும்.
எமது பகுதி இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மாவட்டம், மாகாணம் மட்டுமன்றி தேசிய மட்டத்திலும் சாதனைகள் படைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இவ்வழங்கல் மேற்கொள்ளப்பட்டது.
இளைஞர்களை நல்ல பாதையில் வழிநடத்தி, சமூகப் பொறுப்புள்ள, ஒழுக்கமிக்க மற்றும் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும் முயற்சியில் ரஹ்மத் பவுண்டேசன் தொடர்ந்து மேற்கொண்டு வரும் மனிதநேயப் பணிகள் சமூகத்தில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றன.
“இளைஞர்கள் வளம் பெறும் போது தான் சமூகமும் வளம் பெறும்” என்ற உயரிய எண்ணத்தை செயலாக்கமாக மாற்றி காட்டும் இந்த நிகழ்வு, கல்முனை மண்ணில் நம்பிக்கையின் புதிய ஒளியை ஏற்றியுள்ளது.














0 comments: