Thursday, February 19, 2026

மனிதநேய உதவிகள்: சவூதி அரேபியாவின் மன்னர் மற்றும் இளவரசர் தலைமையில் இலங்கைக்கு 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழம்..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 🇸🇦🇱🇰 மனிதநேய உதவிகள்: சவூதி அரேபியாவின் மன்னர் மற்றும் இளவரசர் தலைமையில் இலங்கைக்கு 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழம்..!
✍️ எஸ். சினீஸ் கான்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்கும் மக்களின் தேவைகளை உணர்ந்து கொண்டு செயல்படும் சவூதி அரேபிய அரசாங்கத்தின் மனிதநேய அணுகுமுறை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகளாவிய ரீதியில் 120 நாடுகளில் வழங்கப்படும் ரமழான் இந்த உதவிகள் இதன் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இலங்கையில், “இரு புனிதஸ்தலங்களின் பாதுகாவலரின்” பேரீச்சம்பழ விநியோகத் திட்டம் மற்றும் நோன்பு நோற்கும் மக்களுக்கான இப்தார் உணவுகள் வழங்கும் உயரிய நோக்கத்தின் கீழ், இலங்கைக்காகான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமுத் அல்-கஹ்தானி அவர்களின் தலைமையில், இந்த உதவிகள் நியாயமான முறையில் மசூதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இஸ்லாமிய மையங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
மேலும், சவூதி அரேபியா மன்னர் சல்மான் மனிதநேய உதவி மற்றும் நிவாரண மையம் மூலம் இலங்கைக்கு 50 டன் பேரீச்சம்பழம் வழங்கப்பட்டுள்ளது. இதனை சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமுத் அல்-கஹ்தானி அதிகாரப்பூர்வமாக வழங்கிவைத்தார்.
இந்த முயற்சி, ரமழான் மாதத்தின் ஆன்மீகமும் மனிதநேய உணர்வையும் பிரதிபலிக்கும் ஒன்றாகும்.
இது மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் ஸவூத் மற்றும் இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையிலான சவூதி அரேபியாவின் தூய்மையான மனிதநேய பார்வையை வெளிப்படுத்துகிறது.
நாடு மற்றும் மத வித்தியாசங்களை மீறி உலகெங்கிலும் தேவையுள்ளவர்களுக்கு உதவுதல், மனிதநேய சேவையை வழங்குதல் என்பது சவூதி அரசின் முக்கியக் குணமாகும்.
இந்த உதவி இலங்கையின் முஸ்லிம் சமூகத்துக்கும் பொதுமக்களுக்கும் நிம்மதி மற்றும் நம்பிக்கையைக் கொண்டுவருகிறது.
மேலும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் பரஸ்பர மரியாதையை வலுப்படுத்துகிறது.
இலங்கை மக்கள் சார்பில், மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல்ஸவூத் மற்றும் இளவரசர் முகம்மது பின் சல்மான் ஆகியோருக்கு இந்த மனிதநேய உதவிக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அல்லாஹ் இந்த நேர்த்தியான தலைமையின் கீழ் சவூதி அரேபியாவை மனிதநேயத்தின் ஒளியாய் நிலைநாட்டச் செய்வாயாக.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்




SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: