

கல்முனை ரஹ்மத் ப
வுண்டேஷன் மூலம் இஸ்லாமிய புதுவருடத்தை முன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வலது குறைந்த மாளிகைக்காடு பிரதேச பயனாளர்களுக்கு இருசக்கர நாற்காலிகள் வழங்கிவைப்பு..!

ஏ.எஸ்.எம்.அர்ஹம்


கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனுக்கு கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளுக்கு அமைவாக இஸ்லாமிய புதுவருடமான முஹர்ரம் மாதத்தில் YWMA மற்றும் ரஹ்மத் பவுண்டேஷன் இணைந்து மாளிகைக்காடு பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வலது குறைந்த பயனாளர்களுக்கு இருசக்கர நாற்காலிகளை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் பணிப்புரைக்கமைவாக இருசக்கர நாற்காலி வழங்கிவைப்பட்டன.
இதன்போது பவுண்டேஷன் உறுப்பினர்கள், குறித்த பயனாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
0 comments: