Sunday, June 15, 2025

சாய்ந்தமருதில் சர்வதேச சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தின நிகழ்வுகள்..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 சாய்ந்தமருதில் சர்வதேச சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தின நிகழ்வுகள்..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 சர்வதேச சிறுவர் தினமானது நாடாளவிய ரீதியில் (12) இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவிலும் பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் அவர்களின் ஆலோசனைக்கு அமைய உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா அவர்களின் வழிகாட்டலுக்கமைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்களது ஒருங்கினைப்பில் சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம் அஷ்ரப் வித்தியாலய அதிபர் எம்.ஐ.சம்சுதீன் அவர்களின் ஏற்பாட்டில் கமு/கமு/லீடர் எம் எச் எம் அஷ்ரப் வித்தியாலயத்தை மையப்படுத்தி இரண்டு கட்டங்களாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதலாம் கட்டமாக மாணவர்களையும், பொதுமக்களையும் மையப்படுத்தி விழிப்புணர்வு நடை பவனி பாடசாலையை அண்டிய வீதியினுடாக சந்தை பகுதியை ஊடறுத்து சென்று பதாதைகள் மூலமாகவும் துண்டுபிரசுரங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் முக்கியமான விடயம் சந்தை பகுதியினை அண்டியதாக இந் நடை பவனி மேற்கொள்ளப்பட்டமை சிறப்பம்சமாகும்.
இரண்டாம் கட்டமாக இன்றைய தினத்தின் முக்கியத்துவம் தொடர்பாகவும், சிறுவர் தொழிலாளர்கள் என்றால் யார்? எவ்வாறு அவர்கள் தொழிலுக்கு உட்படுத்தபடுகின்றார்கள்? ஆபத்தான 51 தொழில்கள் தொடர்பான விளக்கம் மற்றும் சட்டரீதியான நடவடிக்கை தொடர்பாக விரிவான விளக்கம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா, பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், முறைசார கல்வி இணைப்பாளர் எம்.எம். சியாம் ஆகியோரினால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு அதிபர் எம்.ஐ.சம்சுதீன் அவர்களின் அர்பணிப்பான முன்னெடுப்பினால் சகல விடயங்களையும் முன்னின்று மேற்கொண்டிருந்தமையுடன் பாடசாலை பிரதி, உதவி அதிபர்கள் சிறப்பான முன்னெடுப்பை மேற்கொண்டமைக்காக பிரதேச செயலகம் நன்றியை தெரிவித்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், நன்னடத்தை அபிவிருத்தி உத்தியோகத்தர், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய உத்தியோகத்தர், கிராம நிலதாரிகள், நிர்வாக உத்தியோகத்தர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்












SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: