Monday, May 12, 2025

மீனவர்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதியிடம் விளங்கப்படுத்தி தீர்வை பெற்றுத் தருவேன் : ஏ. ஆதம்பாபா எம்.பி..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 மீனவர்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதியிடம் விளங்கப்படுத்தி தீர்வை பெற்றுத் தருவேன் : ஏ. ஆதம்பாபா எம்.பி..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 மீனவர்களின் பிரச்சினைகள் தீர்க்க ஆர்ப்பாட்டம் செய்வதை விட அரச தலைவர்களுக்கு பிரச்சினையை எத்திவைப்பதே சிறந்த தீர்வு. தமது பிரச்சினைகள் சில தினங்களில் தீராது போனால் மீனவர்கள் வீதிக்கு இறங்கப்போவதாக அறிவித்துள்ளார்கள். அதற்கான சூழ்நிலை உருவாகாது ஜனாதிபதி, மீன்பிடி அமைச்சர் போன்றோருக்கு இந்த பிரச்சினைகளை எத்திவைத்து தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன். மீனவனின் பிள்ளையான எனக்கு மீனவர்களின் பிரச்சினையை பற்றி யாரும் விளங்கப்படுத்த தேவையில்லை என தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாபா தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஆழ்கடல் மீனவர் சங்கங்கள், மீனவர் சமாசங்கள், மீனவர் சம்மேளனங்கள், மீனவர்கள் ஆகியன இணைந்து சாய்ந்தமருதில் இன்று நடத்திய மீன் திருட்டை ஒழிப்பது தொடர்பாக ஒன்று கூடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு மீனவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,
கடந்த காலங்களில் இருந்த அரசியல்வாதிகள் ஒலுவில் துறைமுகம் பற்றியோ, மீனவர்களின் பிரச்சினைகள் பற்றியோ எங்கும் பேசவில்லை. மீனவர்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை. நான் பல வருடங்களாக பல்வேறு தரப்பினர்களையும் அணுகி மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க பல்வேறு முயற்சிகளை செய்து கொண்டு தான் இருக்கிறேன். நாங்கள் ஜே.வி.பியை இங்கு அறிமுகம் செய்தபோது யாரும் எங்களை ஆதரிக்கவில்லை. ஆனால் மீனவர்கள் இம்முறை என்னுடன் சேர்ந்து வெற்றிக்காக உழைத்தார்கள். ஆனபோதிலும் நான் தோல்வி அடைந்தேன். கொள்கைகளை மாற்றி ஜனாதிபதி என்னை பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளார்.
பலருடைய குடும்பத்தின் வாழ்வாதாரமான இந்த தொழில் இப்போது கஷ்டத்தை உடைய நிலைக்கு சென்றுள்ளது. அந்த நிலையை நானும் அறிவேன். மீனவர்கள் போராட்டம் செய்து 10-15 நாட்களுக்குள் தீர்வு அடையலாம் என்று எண்ணுகிறார்கள். அது சாத்தியமில்லை. அரசாங்கம் அமைக்கப்பெற்று 06 மாதங்களே கடந்துள்ளது. ஜனாதிபதி, உரிய அமைச்சர்கள், உரிய அதிகாரிகளை கொண்டு விரைவில் தீர்வை பெற்றுத் தருவேன் என்றார்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: