Saturday, June 6, 2026

கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலின் நிருவாகத்தினர் பள்ளிவாசலின் புதிய கட்டிட அபிவிருத்தி தொடர்பாக ரஹ்மத் மன்சூருடன் முக்கிய சந்திப்பு..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலின் நிருவாகத்தினர் பள்ளிவாசலின் புதிய கட்டிட அபிவிருத்தி தொடர்பாக ரஹ்மத் மன்சூருடன் முக்கிய சந்திப்பு..!


✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………


✅👉 கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலின் புதிய கட்டிட அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக, பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களை இன்று அவரது காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.


இச்சந்திப்பின் போது, பள்ளிவாசலை நவீன வசதிகளுடன் கூடிய அழகிய கட்டிடமாக அபிவிருத்தி செய்வதற்கான எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.


 மேலும், கட்டிட நிர்மாணத் திட்டத்தின் வரைபடம் மற்றும் தேவைகள் அடங்கிய மகஜர் ரஹ்மத் மன்சூர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

அதனைப் பெற்றுக்கொண்ட அவர், திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் அவசியம் குறித்து கேட்டறிந்ததுடன், பள்ளிவாசலின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவது தொடர்பாகவும் தனது கவனத்தை செலுத்தினார்.


இந்நிகழ்வில், கல்முனை முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தற்போதைய தலைவருமான ஏ. எம். பஷீர் அவர்கள், பள்ளிவாசலின் தலைவர் உட்பட நிர்வாக சபை உறுப்பினர்கள், உலமாக்கள் மற்றும் சமூகப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


சமூகத்தின் ஆன்மீக மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் இவ்வபிவிருத்தித் திட்டம், எதிர்காலத்தில் பள்ளிவாசலின் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்










SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: