Sunday, December 7, 2025

கஃபாவைப் பார்வையிட்ட இஸ்லாமபாத் மாணவர்கள்..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கஃபாவைப் பார்வையிட்ட இஸ்லாமபாத் மாணவர்கள்..!
✅👉 2025.11.06ம் திகதி கல்முனை இஸ்லாம்பாத் முஸ்லிம் மகா வித்யாலய பாடசாலை மாணவர்ளின் சித்திரக் கண்காட்சி நடைபெற்றது.
இக் கண்காட்சியினை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு எம்.எஸ்.சஹுதுல் நஜீம் , பாடசாலை அதிபர் திரு. ஏஜீ.எம். றிசாத், ஆகியோர் நாடாவெட்டி நிழ்வை ஆரம்பித்துவைத்தனர்.
மேலும் இவர்களுடன் இணைந்து சித்திரப்பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகர், பாடசாலை பிரதி அதிபர், பகுதித்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களும் பார்வையிட்டனர்.
சித்திரப் பாட ஆசாரியர் ஏ.எஸ்.எம் நிஸ்வி அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கன்காட்சிக்கான ஆக்கங்கள் ஆனைத்தும் தரம் 9 மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டவைகளாகும். கழிவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒட்டுச் சித்திரங்கள், இரேகைச் சித்திரங்கள், அலங்காரச் சித்திரங்கள், தூரதரிசனக் காட்சிகள் எனப் பலவகையான சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அத்தோடு மக்கா நகரில் அமையப் பெற்றுள்ள கஃபாவின் சாயலை ஒத்த மாதிரிகஃபாவும் மாணவர்களால் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
மேலும் இக்கண்காட்சியினை பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் பார்வையிட்டதனைப் படங்களில் காணலாம்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்














SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: