Sunday, October 26, 2025

சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தீபாவளி கொண்டாட்டம்..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தீபாவளி கொண்டாட்டம்..!
✍️ ஏ.எச்.றகீப்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 தமிழ் மக்களின் மிக முக்கியமான கொண்டாட்டங்களில் ஒன்றாக தீபாவளி கொண்டாட்டம் காணப்படுகின்றது. உலகில் தீமைகள் எரிந்து நன்மை எனும் ஒளி வீசி வாழ்வில் சந்தோசம், மகிழ்ச்சி, இன்பகள் ஒளி வீசும் நாளாக தீபாவளி தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
உலகின் பல நாடுகளில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டங்கள்
புத்தாடை அணிந்தும், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில், தேசிய சமூக ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை கட்டியெழுப்பும் நோக்குடன் நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் சிறப்பு தீபாவளி கொண்டாட்டம் இறக்காமம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், இறக்காமம் மாணிக்கமடு தமிழ் கிராமத்தில் 2025.10.22 ஆம் திகதி நடைபெற்றது.
நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல். றினோசா அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உதவி பிரதேச செயலாளர் திருமதி ஏ.கே. றொஸின்தாஜ் அவர்கள் கலந்துசிறப்பித்தார்.
மேலும் நிகழ்வில், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், நிருவாக உத்தியோகத்தர் ஐ.எல். முஹம்மட் றஸாக், கிராம உத்தியோகத்தர் ஏ.சி.எம். சமீர், பொருளாதர அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.சிறாஜ், உளவள ஆலோசகர் ஏ.எச்.றகீப், சுற்றுச் சூழல் அபிவிருத்தி உத்தியோகத்தர். வை.பி. ஜெமீனா உட்பட கிராம மட்ட தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர்களின் தீபாவளி சிறப்பு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்










SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: