Thursday, September 18, 2025

“தோப்பாகிய தனிமரம்” – பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் 25ஆவது நினைவேந்தல் மற்றும் “ஓயாத புயலும் சாயாத மரமும்” நூல் வெளியீட்டு நிகழ்வு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 “தோப்பாகிய தனிமரம்” – பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் 25ஆவது நினைவேந்தல் மற்றும் “ஓயாத புயலும் சாயாத மரமும்” நூல் வெளியீட்டு நிகழ்வு..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 “தோப்பாகிய தனிமரம்” எனும் தொனிப்பொருளில், பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25ஆவது நினைவேந்தல் நிகழ்வும், மர்ஹூம் முழக்கம் ஏ.எல். அப்துல் மஜீத் அவர்களின் “ஓயாத புயலும் சாயாத மரமும்” எனும் தலைப்பில் முஸ்லிம் காங்கிரஸ் வரலாற்றுப் பதிவுகள் நூல் வெளியீட்டு விழாவும் இன்று (16) நிந்தவூர் அல்-அஷ்ரக் பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் தலைமை தாங்கினார்.
மர்ஹூம் முழக்கம் ஏ.எல். அப்துல் மஜீத் அவர்களின் நூலைப் பற்றி பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் அவர்கள் ஆய்வுரையை ஆற்றினார்.
பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கலந்து கொண்டார்.
அதிதிகளாக அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ.எல்.எம். அதாவுல்லா, கட்சியின் பிரதித் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், பாராளுமன்ற உறுப்பினர் பாசித், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக், கட்சியின் தேசிய பொருளாளரும் கல்முனை முன்னாள் மாநகரசபை பிரதிமுதல்வருமான ரஹ்மத் மன்சூர், ஏறாவூர் நகரபிதா நழீம், அட்டாளைச்சேனை நகரபிதா உவைஸ், இறக்காமம் பிரதேச நகரபிதா முஸ்னி, அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தவம், காரைதீவு நகரபிதா சு. பாஸ்கரன், நிந்தவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி, மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள், போராளிகள், மர்ஹூம் முழக்கம் ஏ.எல். அப்துல் மஜீத் அவர்களின் குடும்பத்தினர் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்





















SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: