Monday, March 3, 2025

காங்கேயனோடை தெற்கு கிராம விவகாரம்; ஹிஸ்புல்லாஹ் எம்.பி அரசாங்க அதிபருக்கு எழுத்துமூலம் எடுத்துரைப்பு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 காங்கேயனோடை தெற்கு கிராம விவகாரம்; ஹிஸ்புல்லாஹ் எம்.பி அரசாங்க அதிபருக்கு எழுத்துமூலம் எடுத்துரைப்பு..!
✍️ எஸ். சினீஸ் கான்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 மட்டக்களப்பு மாவட்டத்தில் மன்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள
பூர்வீக கிராமமான காங்கேயனோடை 155B தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் பல தசாப்தங்களாக வசித்து வந்த சுமார் 27 குடும்பங்களை எவ்வித அறிவித்தலுமின்றி அருகிலுள்ள புதிய கிராம சேவையாளர் பிரிவுடன் இணைக்கின்ற நடவடிக்கையை நிறுத்த கோரி கடந்த வாரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ,
மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் அனைவருக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் கையொப்பத்தோடு கடந்த வாரம் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் (1) மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் ஏற்பாட்டில் நேரடியாக சென்று சந்தித்து நிலைமைகளை தெளிவு படுத்தியதோடு இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களுடைய கடிதத் தலைப்பில் அரசாங்க அதிபருக்கு வழங்கப்பட்ட கடிதத்தினையும் வழங்கி பாராளுமன்ற உருப்பினரின் செயலாளர் விடயங்களை முன்வைத்தார்.
இவ்விடயம் தொடர்பில் விரைவாக ஆராய்ந்து பதில் அளிப்பதாக அரசாங்க அதிபர் இதன்போது உறுதியளித்தார்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: