

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கண் வில்லைகள் ரஹ்மத் மன்சூர் அவர்களினால் கையளிப்பு..!

ஏ.எஸ்.எம்.அர்ஹம்


சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு முதற்கட்டமாக ஒரு தொகை கண் வில்லைகள் கல்முனை முன்னாள் மாநகரசபை பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களினால் இன்று (14) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் D.பிரவாஸ்கங்கர் அவர்களிடம் கையளித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பவுண்டேசன் உறுப்பினர்கள் என் பலரும் கலந்துகொண்டனர்.

ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
0 comments: