Thursday, March 20, 2025

கல்முனையில் சமய தீவிரவாதம் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் சிவில் அமைப்பினர்களுடனான விஷேட கலந்துரையாடல்.

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 கல்முனையில் சமய தீவிரவாதம் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் சிவில் அமைப்பினர்களுடனான விஷேட கலந்துரையாடல்.
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 அண்மையில் பேசுபொருளாகிய கல்முனையில் அடிப்படைவாதம் அல்லது தீவிரவாதம் உருவெடுக்கிறது எனும் குற்றச்சாட்டு தொடர்பில் கல்முனையின் தாய்ப்பள்ளிவாசலான முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப்பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃப் நம்பிக்கையாளர் சபை பல கட்ட முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றது.
அந்த வகையில் இது விடயமாக இதுவரைக்கும் எடுக்கப்பட்டிருக்கும் முன்னெடுப்புகள் குறித்து தெளிவுபடுத்துவதற்காகவும், எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்குமாக கல்முனையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் சிவில் அமைப்பினர்களுடனான பிரத்தியேக கலந்துரையாடல் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை 16-03-2025 அன்று நண்பகல் 1.30 தொடக்கம் பி.ப 4.00 வரை ஆஷாத் ப்ளாசா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் நிருவாகிகளும், அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல் ஜமாஆ உலமா சபையினர், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா - கல்முனைக் கிளையினர், மற்றும் முன்னணிசிவில் அமைப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர் .
மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் முக்கிய பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக இவ்விடயத்தினை பெரிய பள்ளிவசாலினது தலைமையில் அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் எனவும் இக்குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாக ஊடகங்களில் குறிப்பிடப்படும் குழுவினை நேரடியாக அழைத்து அவர்களின் கொள்கைகள், பின்பற்றுதல்கள் தொடர்பில் கலந்துரையாடி அறிந்து ஆவணப்படுத்தல் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன்பின்னர் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஊர் தழுவிய ரீதியில் முன்னெடுத்தல் எனவும் ஏகமனதாக தீர்மானம் எட்டப்பட்டது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்





SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: