

கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டின் மூலம் வாழ்வாதார உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு..!

ஏ.எஸ்.எம்.அர்ஹம்


மேற்படி கல்முனை ரஹ்மத் பவுண்டேசனினால் வருடா வருடம் வழங்கி வருகின்றே வாழ்வாதார உலர் உணவு மற்றும் பேரீச்சம் பழப் பொதிகளை வழங்குகின்ற நிகழ்வு இன்று (16) பவுண்டேசனின் தலைமைக்காரியாலயத்தில் கல்முனை முன்னாள் மாநகரசபை பிரதி முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இவ் வாழ்வாதார உலர் உணவு பொதிகளை CSWMA மற்றும் YWMA நிருவனத்தின் அனுசரணை வழங்கியதுடன் மற்றும் ஒரு தொகை பேரீச்சம் பழங்களை அல் ஹிக்மா நலன்புரி அமைப்பினரும் வழங்கி இருந்ததுடன் மேலும்
இந் நிகழ்விற்கு முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் JP. நிஷார் கல்முனை சமூக சேவை உத்தியோகத்தர் MM.முகம்மது ஜெய்ஷான் மற்றும் உலமாக்கள், பவுண்டேசனின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள்,பயனாளிகள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
0 comments: