Monday, February 24, 2025

கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயம் மற்றும் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயங்களுக்கு பொதுக்கிணறுகள் மற்றும் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் என்பன வழங்கி வைப்பு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயம் மற்றும் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயங்களுக்கு பொதுக்கிணறுகள் மற்றும் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் என்பன வழங்கி வைப்பு..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களின் நலன் கருதி மிகநீண்ட நாட்கள் தேவையாக காணப்பட்ட குடிநீர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக பொதுக் கிணறு அமைத்துத் தருமாறு அம்பாறை மாவட்டம் கல்முனை வலயக் கல்விப் பிரிவில் உள்ள சாய்ந்தமருது கமு/கமு/ எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலையம் மற்றும் சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஜலால் வித்தியாலயத்தின் நிர்வாகிகள் ரஹ்மத் பவுண்டேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக Y.W.M.A. பேரவையின் ஒருங்கிணைப்பில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் பணிப்பின் பெயரில் மிகவும் குறுகிய நாட்களுக்குள் குறித்த கிணறுகள் அமைக்கப்பட்டு பாடசாலை நிருவாகிகளிடம் கையளித்து வைக்கப்பட்டன.
இதன்போது தலைநகர் கொழும்பிலிருந்து வருகை தந்த Y.W.M.A. பேரவையின் தலைவி சகோதரி பவாஸா தாஹா அவர்களும், கனடாவிலிருந்து வருகை தந்த C.S.M.W.A. பேரவையின் தலைவி சகோதரி சீனியா தாஸிம் அவர்களும் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு பாடசாலை நிருவாகிகளிடம் இக்கிணறுகளை திறந்து கையளித்து வைத்தனர்.
மேலும் இந்நிகழ்வின் ஓர் அங்கமாக பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் பிரதம அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இந் நிகழ்வில் பாடசாலை அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், புத்தி ஜீவிகள், கண்ணியத்திற்குரிய உலமாக்கள், பவுண்டேசன் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


























SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: