விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக Y.W.M.A. பேரவையின் ஒருங்கிணைப்பில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் பணிப்பின் பெயரில் மிகவும் குறுகிய நாட்களுக்குள் குறித்த கிணறுகள் அமைக்கப்பட்டு பாடசாலை நிருவாகிகளிடம் கையளித்து வைக்கப்பட்டன.
இதன்போது தலைநகர் கொழும்பிலிருந்து வருகை தந்த Y.W.M.A. பேரவையின் தலைவி சகோதரி பவாஸா தாஹா அவர்களும், கனடாவிலிருந்து வருகை தந்த C.S.M.W.A. பேரவையின் தலைவி சகோதரி சீனியா தாஸிம் அவர்களும் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு பாடசாலை நிருவாகிகளிடம் இக்கிணறுகளை திறந்து கையளித்து வைத்தனர்.
மேலும் இந்நிகழ்வின் ஓர் அங்கமாக பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் பிரதம அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இந் நிகழ்வில் பாடசாலை அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், புத்தி ஜீவிகள், கண்ணியத்திற்குரிய உலமாக்கள், பவுண்டேசன் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




























0 comments: