🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 அல்குர்ஆனையும் நபிகள் நாயகத்தின் வாழ்வையும் பின்பற்றி சமத்துவமும் நல்லிணக்கமும் வளர்ப்போம்
✅👉 மீலாத் தின செய்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொருளாளர் ரஹ்மத் மன்சூர்…!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………………
✅👉 அல்குர்ஆனின் போதனைகளையும், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் உயரிய வாழ்வியல் வழிகாட்டல்களையும் பின்பற்றி, சமத்துவம், சகோதரத்துவம், இன நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வளர்ப்பதே இன்றைய காலத்தின் அவசியமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொருளாளரும்,ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகத்தலைவரும், கல்முனை மாநகர சபை முன்னால் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் தனது மீலாத் தின செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இன்றைய உலகில் இன, மத, மொழி வேறுபாடுகளால் பல்வேறு முரண்பாடுகளும் பிரச்சினைகளும் உருவாகி வருகின்றன. இத்தகைய சூழலில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வில் காணப்படும் நீதி, மனிதநேயம், சகிப்புத்தன்மை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய உயரிய பண்புகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
இலங்கை போன்ற பல இன, பல மத மக்கள் வாழும் நாட்டில், பரஸ்பர புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் வளர்த்து, அனைத்து சமூகங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் வலுப்படுத்துவது எமது பொறுப்பாகும்.
யுத்தம், வன்முறை மற்றும் அநீதியால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு வரும் இக்காலகட்டத்தில், மனித உயிரின் பெறுமதியையும் அமைதியையும் நீதியையும் வலியுறுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்விலிருந்து நாம் சிறந்த படிப்பினைகளைப் பெற வேண்டும்.
அன்னாரின் மீலாத் தினத்தில், வெறுப்பை விட அன்பையும், பிரிவினையை விட ஒற்றுமையையும், முரண்பாட்டை விட நல்லிணக்கத்தையும் முன்னிறுத்தி, அனைவரும் அமைதியுடனும் சமத்துவத்துடனும் வாழும் சமூகத்தை உருவாக்க உறுதி பூணுவோம்.
“நாம் உம்மை அகிலத்தாருக்கு ஓர் அருட்கொடையாகவே அன்றி அனுப்பவில்லை.”
(அல்குர்ஆன் – அல்-அன்பியா 21:107)
மீலாத் தின நல்வாழ்த்துக்கள்!
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


0 comments: