Thursday, August 13, 2026

கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் பாலமுனையில் பொதுக்கிணறு திறந்துவைப்பு…!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் பாலமுனையில் பொதுக்கிணறு திறந்துவைப்பு…!


✍️ எம்.சி.எம்.ஷம்சுல் முனா 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………


✅👉 பாலமுனை பிரதேசத்தில் குடிநீர் வசதியின்றி நீண்டகாலமாக கடுமையான சிரமங்களை எதிர்கொண்ட பல குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் புதிய பொதுக்கிணறு அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.


YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான கௌரவ ரஹ்மத் மன்சூர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இந்தத் திட்டம் மிகவும் குறுகிய காலத்திலேயே திட்டமிடப்பட்டு திறம்பட நிறைவேற்றப்பட்டது.


பொதுக்கிணறு திறப்பு நிகழ்வில் உலமாக்கள், பயனாளிகள், சமூக செயற்பாட்டாளர்கள், ரஹ்மத் பவுண்டேஷன் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், பிரதேச மக்களின் அன்றாட நீர்த்தேவையை கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்பட்ட இச்சமூகநலப் பணிக்கு மக்கள் தமது மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தனர்.


இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைத் தேவைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கான நடைமுறைத் தீர்வுகளை வழங்கும் இத்தகைய சமூகநலப் பணிகள் மிகவும் பாராட்டத்தக்கவை எனக் குறிப்பிட்டார்.


மேலும், “பதவியின்றி மக்களின் மனங்களில் பதியும் செயற்பாடுகளே உண்மையான சேவை” என்பதற்கு ரஹ்மத் பவுண்டேஷன் முன்னெடுத்து வரும் இவ்வாறான பணிகள் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.


மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான சுத்தமான நீரைப் பெற்றுக்கொள்ள முடியாமல் சிரமங்களை எதிர்கொண்ட குடும்பங்களுக்கு இந்தப் பொதுக்கிணறு ஒரு முக்கியமான நிவாரணமாக அமைந்துள்ளது.


சமூகத்தின் தேவைகளை உணர்ந்து, அவசரமான தருணங்களில் மக்களுக்கு கைகொடுக்கும் இத்தகைய சேவைகள், சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்துவதுடன், உதவியை எதிர்பார்க்கும் பலருக்கும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன.


மக்களின் தேவையை அறிந்து செயல்படும் சேவையே நிலையான சமூகப் பணியாகும் என்பதற்கு பாலமுனையில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பொதுக்கிணறு மற்றுமொரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்






SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: